அனைத்துப்பகுதி மக்களும் - மருத்துவ மாணவர்களும் குரலெழுப்ப சிபிஎம் வேண்டுகோள்
சென்னை, அக். 31- போராடும் மருத்துவர்களை மிரட்டி பழிவாங்குவதா? என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்கள் கடந்த ஏழு நாட்களாக தங்களது நியாய மான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத் தை மேற்கொண்ட சில மருத்து வர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மருத்துவர்கள் நீண்டகாலமாக நியாயமான கோரிக்கைகளை வலி யுறுத்தி வந்தபோதும், ஏற்கனவே பல கட்ட போராட்டங்களை நடத்திய போதும், தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது அரசின் தவறான அணுகு முறையாகும். இந்நிலையில் போராட்டத் தில் ஈடுபடுவதைத் தவிர அரசு மருத்து வர்களுக்கு வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உண்மையில் அமைதியாக பணிபுரிந்து வந்த மருத்து வர்களை இத்தகைய போராட்டத்தில் தள்ளிவிட்டது தமிழக அரசுதான் என்பதை மூடி மறைக்க முடியாது. போராடும் அரசு மருத்துவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பதி லாக, மருத்துவர்களை ஊர்மாற்றம் செய்வதும், பணிக்கு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; மாற்று டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என மருத்துவர்களை மிரட்டுவது போன்ற அரசின் ஆணவப்போக்கு ஒருபோதும் வெற்றிபெறாது என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
டெங்கு, சிக்கன்குனியா போன்ற காய்ச்சல்கள் பரவி வருவதால், அதிக மான நோயாளிகள் அரசு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இது நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் ஆபத்து உள்ளது. எனவே, தமிழக அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்து வர்களை உடனடியாக அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. போராடும் மருத்துவர்களுக்கு ஆதர வாக தொழிலாளர்கள், பொதுமக்கள் நாளைய மருத்துவர்களாகவுள்ள மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மற்றும் அனைத்து மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு குரல் எழுப்ப வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.