மாற்றுத்திறனாளிகள் கருத்தரங்கில் பிருந்தாகாரத் வலியுறுத்தல்
சென்னை, பிப். 21- தனியார் துறை வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வலியுறுத்தினார். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம், ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை ஆகிய அமைப்பு களின் 10 ஆம் ஆண்டு நிறைவு விழா வியாழனன்று (பிப்.10) கொண்டா டப்பட்டது. இதனையொட்டி, தனியார் துறை வேலைவாய்ப்பில் மாற்றுத்திற னாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க சிறப்புச் சட்டம் இயற்றக் கோரி ஊர்வலம், கருத்தரங்கம் நடை பெற்றது. சிறப்பு குழந்தைகளின் கலை நிகழ்வுகளோடு தொடங்கிய கருத்த ரங்கில் பிருந்தாகாரத் பேசியது வருமாறு:- பாகுபாட்டிற்கு எதிராக, உரி மைகளுக்காக மாற்றுத்திறனாளிகள் சங்கம் கடும் போராட்டங்களை நடத்தி வருகிறது. அரசும், சமூகமும் பரிதாபம் காட்டுவதை மாற்றுத்திறனாளிகள் விரும்பவில்லை. மாறாக, உரிமை யையும் மரியாதையையுமே விரும்பு கிறார்கள். மாற்றுத்திறனாளிகள் தெய்வப் பிறவிகள் அவர்களை வணங்குவதாக பிரதமர் மோடி கூறு கிறார். வணங்கவோ, பரிதாபப்படவோ தேவையில்லை. அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகளை கொடுங்கள் என்றுதான் கேட்கிறார்கள். இந்தியாவில் தினசரி 93 வன்பு ணர்ச்சி வழக்குகள் பதியப்படுகிறது. இத்தகைய தாக்குதலுக்கு உள்ளாகும் மாற்றுத்திறனாளி பெண்கள் குறித்த புள்ளி விவரம் கூட அரசிடம் இல்லை. மாற்றுத் திறனாளிகள் மீதான பாலியல் வழக்குகளை கூட முறையாக பதிவு செய்ய மறுக்கின்ற னர். இந்தளவிற்குதான் மாற்றுத்திற னாளிகள் பற்றிய அரசின் அக்கறை உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மாற்றுத்திற னாளிகள் பற்றிய சமூகத்தின் பார்வை எப்படி இருக்க வேண்டும் என்ற புரி தலை உருவாக்கி இருக்கிறோம். அர சின் கொள்கைகளில் உள்ள பாகுபாடு, உரிமை மறுப்பை சரி செய்ய மாற்றுத் திட்டங்களை கொடுத்தும், வென்றும் வருகிறோம். மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பின் மூலமே பொருளாதார சுதந்திரத்தை பெற முடியும். முத லாளித்துவ பொருளாதார கொள்கை வேலையின்மை அதிகரிக்கிறது. பிரத மர் பெயரால் அறிவிக்கப்படும் திட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் பயனடையவில்லை. அரசு திட்டங்கள், துறைகளில் மாற்றுத்திறனாளிகள் பெற்றுள்ள வேலைவாய்ப்புகள் குறித்த புள்ளி விவரம் கூட அரசிடம் இல்லை. அரசின் தவறுகளை மறைக்கவே அடுத்தடுத்து பல்வேறு அறி விப்புகளை வெளியிடுகிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த, மாநில அரசு விதிமுறைகளை உரு வாக்கியுள்ளது. மத்திய அரசு சட்டம் வழங்கியுள்ள நன்மைகளை பறிப்ப தாகவே அந்த விதிமுறைகள் உள்ளன. மாநில அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 விழுக் காடு இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். இதற்கான விதிகளை உருவாக்கி, தடைகளை அகற்ற வேண்டும். தனியார் துறை வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும். ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் கோரிக்கை களை வெல்வோம்.
அர்ப்பணிப்பு - தியாகம்
நாடு முழுவதும் மாற்றுத்திற னாளிகள் தனித்தனியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மாறாக, தமிழகத்தில் அனைத்து மாற்றுத்திறனாளி அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஒன்றுபட்ட போராட்டம் நடத்தி கோரிக்கைகளை வென்று வருகிறார்கள். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் 36 மாவட்டங்களில் மாவட்டக் குழுக்களோடு, 250 தாலுகாக்களில், 1800 கிளைகள் செயல்படுகிறது. இந்த பிரம்மாண்ட வளர்ச்சியின் பின்னால் கடுமையான உழைப்பும், அர்ப்பணிப்பும், தியாகமும் உள்ளது. வாழ்த்துகிறோம். 10 ஆண்டுகளில், சமத்துவ சமூகத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகள் பயணிப்ப தற்கு உலகெங்கும் உள்ள அமைப்பு களுக்கு தமிழக அமைப்பு முன்மாதி ரியாக திகழும். 4 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளோடு தொடங்கப்பட்ட தேசிய மேடையில் 14 மாநிலங்கள் இணைந்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார். பிருந்தாகாரத்தின் உரையை பேரா. சந்திரா மொழியாக்கம் செய்தார்.
சட்டம் இயற்றுவோம்
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., பேசுகையில், தமிழகத்தில் அடுத்தாண்டு ஆட்சி மாற்றம் நிகழும். அப்போது மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் துறை யில் இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்படும். மாற்றுத்திறனாளி களுக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருப்போம் என்றார். சென்னை உயர் நீதிமன்ற (ஓய்வு) நீதிபதி கே.சாமிதுரை“தனியார் துறை யில் இடஒதுக்கீடு பெற அனைத்து வகையிலும் உதவியாக இருப்பேன்” என்றும், டிச.3 இயக்கத்தின் தலைவர் தீபக், “உடல் ஊனம் உள்ளத்தில் இல்லை. இடஒதுக்கீட்டை பெற்றே தீருவோம்” என்றும் முழங்கினார். இந்த கருத்தரங்கிற்கு தலைமை தாங்கி பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, “அமைப்பு தொடங்கி 10 ஆண்டுகளில் சில கோரிக்கைகளை விதைத்துள்ளோம். சிலவற்றை அறுவடை செய்துள் ளோம். தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை கடும்போராட்டத்தால் வெல்வோம்” என்றார். சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், சங்கத்தின் புரவலர் தாவூத் மியாகான், மாநில துணைத் தலைவர் பி.எஸ்.பாரதிஅண்ணா, பி. ஜீவா உள்ளிட்டோர் பேசினர். சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா. சுப்பிரமணியம் உள்ளிட்டு நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.