சென்னை, ஜூலை 26- பாஜகவின் மறுபதிப்பாக அதிமுக மாறிவிட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “மெஜாரிட்டி, மைனாரிட்டி என்பது இப்போது கேள்வியல்ல” என்று செயற்கையாக நியாயப் படுத்துவதற்காகப் பேசி, முத்தலாக் மசோதாவிற்கு மக்களவையில் அதி முக ஆதரவு அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது அதிமுக விற்குள் இருக்கும் இரட்டைத் தலைமையின் இரட்டை வேடத்தை பகல் வேடத்தை பளிச்சென வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. “சிறுபான்மையின மக்களின் நலனை அதிமுக ஒரு போதும் விட்டுக் கொடுக்காது” என்று, உள்ளத்தில் கபட எண்ணத்தை மறைத்து வைத்துக்கொண்டு, உதட்டளவில் பேசிக் கொண்டிருக்கும் முதல மைச்சர் பழனிசாமியும், துணை முத லமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் “திரைமறைவில்” பாஜக-வுடன் இரண்டறக் கலந்து விட்டார்கள் என் பதை முத்தலாக்கிற்கு தெரி வித்துள்ள ஆதரவு வெளிப்படுத்தி யிருக்கிறது. கடந்த முறை இதே முத்தலாக் மசோதா தாக்கல் செய்தபோது “இது பாஜகவின் கம்யூனல் அஜெண்டா” என்று கடுமையாக தாக்கிப் பேசி னார்
அதிமுக உறுப்பினர் அன்வர் ராஜா. முதலமைச் சர் எடப்பாடியோ தமிழக அரசின் சார்பில் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம் என்றார். ஆனால் இன்றைக்கு நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் தன் பதவியைக் காப்பாற்றி தக்க வைத்துக் கொள்ள பழனிசாமியும், தனது மகனுக்கு எப்படியாவது மத்திய அமைச்சர் பதவி பெற்றுவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வமும் கூட்டணி சேர்ந்து அதிமுகவையும் அரசையும் பாஜக விடம் ஒட்டுமொத்த குத்த கைக்கு நிரந்தரமாக விட்டுள்ளார் கள். ஆகவே தான் இப்போது முத்த லாக் மசோதாவுக்கு ஆதரவு தெரி வித்துள்ளனர். இது மட்டுமல்ல, மோட்டார் வாகனப் போக்கு வரத்து சட்டத் திருத் தத்திற்கு முதலில் தமிழக அரசின் சார்பில் “டஜன் கணக்கில்” எதிர்ப்பு கள் தெரிவித்தனர். ஆனால், தற் போது ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல், தகவல் பெறும் சட்டத் திருத்த மசோதாவிற்கும் மனப்பூர்வ மாக ஆதரவு அளித்து பாஜகவின் மறுபதிப்பாகவே மாறியிருக்கிறது. ஆகவே, அதிமுக என பெயர் வைத்துக் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றுவதை இனியாவது நிறுத்திக் கொண்டு பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டு விடலாம். “பாஜக-ஆர்எஸ்எஸ் கொள்கையே எங்கள் கொள்கை” என்று அறிவித்துவிடலாம். தமிழ கத்தில், இந்த இரட்டையரின் கபட வேடங்களைப் பார்க்கும் எவ ருக்கும், “இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்று, ‘மலைக்கள்ளன்’ திரைப்படத் தில் எம்.ஜி.ஆர். பாடிய பாடல் நிச்ச யம் நினைவுக்கு வரும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.