tamilnadu

img

ரஷ்யாவின் மிகப் பெரிய அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

ரஷ்யாவின் மிகப் பெரிய அலுமினிய சுத்திகரிப்பு ஆலையின் அனல் மின்நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

ரஷ்யாவின் சைபீரியா  நகரில்  மிகப் பெரிய அலுமினிய சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. உலகின் 2-வது மிகப் பெரிய அலுமினிய சுத்திகரிப்பு நிறுவனமான RUSAL-க்கு சொந்தமானது இந்த சுத்திகரிப்பு நிலையம். இந்த ஆலையில் அனல்மின் நிலையம் ஒன்றும் செயல்பட்டு வந்தது. இங்கு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உருவான தீ பல அடி உயரத்து கொழுந்துவிட்டு எரிந்தது.