கே.பாலகிருஷ்ணன் புகழஞ்சலி
சென்னை, ஆக. 25 - மார்க்சியத்தை எளிய முறையில் போதித்த ஆசிரியர் தோழர் தே.லட்சுமணன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார். தோழர் தே.லட்சுமணன் மறைவையொட்டி செவ்வாயன்று (ஆக.25) சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் அவ ரது உருவப்படத்திற்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்க ராஜன், பி.சம்பத், மாநிலக்குழு உறுப் பினர்கள் பா.ஜான்சிராணி, க.உதய குமார், வே.ராஜசேகரன், அலுவலக பொறுப்பாளர் வில்சன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பேசிய மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், “ஊர டங்கு காலத்தில் வீட்டிலிருந்தாலும் அவ்வப்போது தொடர்பு கொண்டு கட்சி அறிக்கை வெளியிட வேண்டிய பிரச்சனைகளை தோழர் தே.இலட்சு மணன் சுட்டிக்காட்டுவார். அரசுப் பணியிலிருந்து விலகி, முழு நேர ஊழியராகி, கட்சி கொடுத்த குறைந்த பட்ச படித்தொகையில் (அலவன்ஸ்) குடும்பத்தை நடத்தினார். அவர் பொறுப்பேற்ற அனைத்து பொறுப்புகளிலும் திறம்பட பணி யாற்றினார். மார்க்சியத்தை எளிய முறையில் எடுத்துச் சொல்லக் கூடிய ஆற்றல் மிக்கவர். மாநில மையத் திலிருந்து பணியாற்றிய காலத்தில் அவர், செங்கல்பட்டிலிருந்து அதி காலை எழுந்து காலை 7.30 மணிக் கெல்லாம் அலுவலகம் வந்துவிடு வார். சுறுசுறுப்பாக பணியாற்று வார். யாரிடமும் கடிந்து பேசமாட் டார். அவரது இழப்பு ஈடுசெய்ய முடி யாதது. தோழர் டி.எல் ஆற்றிய பணி கட்சியின் வரலாற்றில் என்றென்றும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை” என்று புகழஞ்சலி செலுத்தினார். கொரோனா என்னென்ன விளைவுகள் ஏற்படுத்தும் என்று எண்ணும்போதே அச்சமாக உள்ளது. இத்தகைய சூழல்களுக்கு இடை யில்தான் நமது கட்சி தோழர்கள் களப்பணியாற்றிக் கொண்டிருக் கிறார்கள். தோழர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஜி.ராமகிருஷ்ணன்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், அரசு ஊழியர் பணியி லிருந்து ஓய்வு பெற 10 ஆண்டுகள் இருந்தபோதும், கட்சிக்கேட்டுக் கொண்டதற்கிணங்க விருப்ப ஓய்வு பெற்றார். கட்சியின் செங்கல்பட்டு மாவட்டக்குழு அமைப்புச் செயலாளராக பொறுப்பேற்று திறம்பட செயலாற்றினார் என்றார்.
செங்கல்பட்டில் அஞ்சலி
தோழர் தே.லட்சுமணன் அவர் களின் உடலுக்கு செங்கல்பட்டில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன், வா.பிரமிளா, க.பீம்ராவ், ஆர்.வேல்முருகன், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ். நம்பு ராஜன், மாநில நிர்வாகி ப.பாரதி அண்ணா, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.மோகனன், கே.வாசுதேவன், ம.பா.நந்தன், மாவட்டக்குழு உறுப்பி னர் அரிகிருஷ்ணன், செங்கல்பட்டு பகுதி செயலாளர் கே.வேலன் மற்றும் தோழர் லட்சுமணனின் சகோதரரும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி யுமான கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செங்கல்பட்டு நகராட்சி மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ஜி.மோகனன் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் மர்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் ப.செல்வசிங் உரையாற்றினார்.