புதுச்சேரி, டிச. 23- குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவர் தங்கப் பதக்கத்தை பெற மறுத்துவிட்டார். புதுச்சேரி காலாப்பட்டிலுள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் 27வது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை (டிச.23) நடைபெற்றது. இவ்விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் பங்கேற்று பல்கலைக் கழக மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, பல்கலைக் கழக துணைவேந்தர் குர்மீத்சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
மாணவர்கள் புறக்கணிப்பு
பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்களும், பொதுமக்களும் போராட் டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குடியரசுத் தலைவர் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி பல்கலைகழக மாணவர்கள் பங்கேற்கச் மாட்டோம் என்று பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தலைவர்கள் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பை ஏற்று பல்கலைக் கழக பட்டம் பெறும் மாணவர்கள் கார்த்திகா, ஏ.எஸ்.அருண்குமார் ஆகியோர் பட்டம் பெறப்போவதில்லை என்று அறிவித்திருந்தனர். அதன் படி அவர்கள் புறக்கணித்தனர். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்ற மாணவர் களையும் பல்கலைக் கழக நிர்வாகமும், காவல்துறையும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து பல்வேறு தொல்லைகள் கொடுத்தது. இதனால், இப்படி ஒரு விழாவில் கலந்துகொள்ள வேண்டியது அவசியம்தானா என்ற சலிப்பும் ஏற்பட்டது.
மாணவி வெளியேற்றம்
வர்கள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் நடைபெறும் விழாவில் மாணவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்து பவர்கள் என்று பட்டம் பெறும் மாணவர்கள் மத அடையாளங்களை கொண்டு இஸ்லாமியர்கள் என்றாலும் தலையில் துணி அணியக் கூடாது என கெடுபிடி செய்தனர். பல்கலைக் கழக தகவல்தொடர்பியல் துறையில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவி ரபிஹா பட்டம் பெறுவதற்கு உள்ளே வந்து இருக்கையில் அமர்ந்தபோது உடனே அவரை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.
பின்னர் குடியரசுத் தலைவர் சென்ற பிறகு பட்டம் பெறுவதற்கு மேடைக்கு அழைத்தனர். அப்போது மேடைக்கு சென்று தனக்கு நடந்த சம்பவங்களை கூறிய மாணவி ரபிஹா, தங்கப்பதக்கத்தை பெற மறுத்துவிட்டார். பட்டத்தை மட்டும் பெற்றுக் கொண்டு திரும்பினார். இது குறித்து செய்தியாளர்களிடம் மாணவி ரபிஹா கூறுகையில், “என்னை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க விடாமல் திட்டமிட்டு காவல்துறையினர் தடுத்துள்ளனர். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தத் சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராடி வருகின்றனர். இப்போராட்டம் தொடர வேண்டும் இதனை கருத்தில் கொண்டு நான் தங்கப் பதக்கத்தை பெறவில்லை” என்றார். கடைகள் அடைப்பு மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் புதுச்சேரி வருகையொட்டி லாஸ்பேட் விமான நிலையத்திலிருந்து காலாப்பட்டில் உள்ள பல்கலைக் கழக வளாகம் வரை செல்லும் வழி நெடுகிலும், உள்ள கடைகள் அடைக்க காவல்துறை உத்தரவிட்டது. இதனால் பொது மக்களும் வியாபாரிகளும் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள். பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பதோடு, வாகன வசதிக்கூட ஏற்பாடு செய்யவில்லை. ஒரு குறிப்பிட்ட பத்திரிகை நிறுவனங்களுக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டதால். இது குறித்து புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை அதிகாரியிடம் கேட்டபோது காவல்துறையினர் தான் அடையாள அட்டை வழங்கினார்கள் என்று பொறுப்பற்ற தனமாக கூறியது செய்தியாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.