tamilnadu

img

சட்ட திருத்தங்களுக்கு எதிராக வலுவான போராட்டம்

திருநெல்வேலி, ஜுலை 22- தொழிலாளர் சட்டங்களை திருத்தி உரிமைகளை சேதப்படுத்தும் மத்திய அரசின் தொகுப்பு மசோதாவுக்கு எதிராக விரிவான வலுவான போராட்ட த்திற்கு தயாராகுமாறு தொழிலாளர் களுக்கு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் 14ஆவது மாநில மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.  நெல்லையில் நடைபெற்று வரும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களில் கூறப்பட்டுள்ள தாவது: தொழிலாளர்களுக்கு அரணாக இருக்கும் தொழிலாளர் சட்டங்களை திருத்தி தனது கார்ப்பரேட் எஜமானர்களுக்கு சேவகம் செய்யும் வகையில் நான்கு தொகுப்புகளாக வகைப்படுத்தி தொழிலாளர் நலன் களையும் பாதுகாப்பையும் நீர்த்துப் போகச் செய்யத் துடிக்கும் பாஜக அரசை இம்மாநாடு கண்டிக்கிறது. தொழில்சார் பாதுகாப்பு நலன் மற்றும் வேலை நிலைமைகள்-2019 மசோதாவினை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக கடந்த ஜுலை 10ல் மத்திய தொழிலாளர் அமைச்சர் அறிவித்தார். இந்த மசோதா தற்போதுள்ள 13 முக்கியமான தொழிலாளர் சட்டங்களை நீக்கி முத லாளிகளுக்கு சாதகமான அம்சங் களை கொண்டுள்ளதாகவும் ஏற்கனவே சட்டத்தில் உள்ள தொழி லாளர் பாதுகாப்பு அம்சங்களை - உரிமைகளை சேதப்படுத்தும் வித மாகவும் இந்த தொகுப்பு மசோதா அமைந்துள்ளது. 

தொழிலாளர்களின் அடிப்படை சுகாதாரம், மருத்துவம் போன்ற வற்றில் தொழிலாளர்களும் தொழிற் சங்கங்களும் கருத்துகளையோ உரிமைகளையோ கூற முடியாத நிலைப்பாடு மசோதாவில் உள்ளது.  நிறுவனங்கள் தங்களது பொறுப் புணர்வை மீறுகிற போது - தலையீடு செய்ய முடியாது. குறைந்த பட்சம் ரூ.178 தின ஊதியமாகவும் ரூ.4628 மாத ஊதியமாகவும் வழங்கி னால் போதும். இது 2014இல் பாஜக அரசு  பங்கேற்ற 46 ஆவது இந்திய தொழி லாளர் மாநாடு ஏற்றுக்கொண்ட 2400 கலோரி  சக்திக்குரிய ஊதியம் என்கிற அடிப்படையை தகர்ப்பதாகும். அதன்படி 2016ல் ஏழாவது ஊதிய  கமிஷன் பரிந்துரைத்த குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18ஆயிரம் (தினம்  ரூ.692.30) என்பதற்கு பதிலாக நாளொன்றுக்கு ரூ.375 முதல் ரூ.445  ஊதியம் என பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் ‘அனைவரை யும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்ற  ஆட்சியாளர்களின் வாய்ச்சவடால் கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்வதே என்கிற உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது.  குறைந்தபட்ச ஊதிய நிர்ணய முடிவு மற்றும் தொழிலாளர் சட்டத் திருத்தங்களை எதிர்த்தும் மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்தும் ஒரு விரிந்த வலுவான போராட்டத்திற்கு தயாராக வேண்டும் என தொழிலாளர் களுக்கு மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.  பொதுப் போக்குவரத்தை பலப்படுத்தி பாதுகாப்பது, போக்கு வரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை தமிழக அரசு பட்ஜெட்டில்  ஆண்டுதோறும் ஒதுக்க, ரிசர்வ் தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய, காவிரி படுகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த மத்திய பாஜக அரசு எடுக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வாழ்த்துரை

மாநாட்டின் இரண்டாம் நாளான திங்களன்று பிரதிநிதிகள் விவாதமும் வாழ்த்துரையும் இடம்பெற்றன. அகில இந்திய சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் துணை பொதுச் செயலாளர் ஆர்.லட்சுமய்யா, சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், துணை பொதுச் செயலாளர் ஆர்.கருமலையான் , மின்  ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 

இன்று பேரணி
செவ்வாயன்று (ஜுலை 23) சம்மேள னத்தின் மாநில நிர்வாகிகள் தேர்வு நடை பெற உள்ளது. அதைத் தொடர்ந்து  அ.சவுந்தரராசன் நிறைவுரையாற்று கிறார். மாலை 3 மணிக்கு பாளை. வாட்டர் டேங்க் அருகிலிருந்து குடும்பத்துடன் தொழிலாளர்கள் பேரணியும் சித்த மருத்துவக் கல்லூரி எதிரில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.