tamilnadu

img

சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை வழக்கு

காவலர் செல்லத்துரை  மனு தள்ளுபடி

மதுரை, ஆக.20- சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர் செல்லத்துரையின் ஜாமீன் மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் வியாழ னன்று தள்ளுபடி செய்தது. சாத்தான்குளம் தந்தை மகன் சித்ரவதை கொலை விவகாரத்தில் ஆய்வாளர் ஸ்ரீதர்,  உதவி காவல் ஆய் வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பத்து பேர்  கைது செய்யப் பட்ட  நிலையில் வழக்கை சிபிஐ  நடத்தி வருகிறது. கைது செய்யப்பட்டு சிறை யிலடைக்கப்பட்டுள்ள  காவ லர் செல்லத்துரை ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதி மன்றத்தில்  மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ஜாமீன் மனு மீதான விசா ரணை மதுரை மாவட்ட கூடு தல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தாண்ட வன் முன்னிலையில் வியாழ னன்று  விசாரணைக்குவந்தது.  விசாரணையின் போது காவலர் செல்லத்துரை, சிபிஐ வழக்கறிஞர்கள் காணொளி காட்சி வாயிலாக ஆஜராயினர். வழக்கு விசார ணை தொடக்க நிலையில் இருப்பதாலும், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ள தாலும் காவலர் செல்லத் துரையின்  ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய சிபிஐ தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதையடுத்து செல்லத்துரையின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
 

;