tamilnadu

img

மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: 3 மாவட்டங்கள் தேர்வு

சென்னை, ஜூலை 26- தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை கணக்  கெடுப்புக்கான பணிகள் 1872ல் தொடங் கப்பட்டு, 1881ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டு களுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன் வரிசை யில் 16ஆவது மக்கள்தொகை கணக்  கெடுக்கும் பணி 2021ஆம் ஆண்டு துவங்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு நடவ டிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில்  இந்த பணிகளின் போது ஏற்படும் சிக்கல் களை சரி செய்ய அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாதிரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி ஆகஸ்டு 12ஆம் தேதி முதல்  செப்டம்பர் 30ஆம் தேதி வரை மாதிரி மக்கள்  தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளி யிட்டுள்ளது. சிவகங்கை, நீலகிரி மற்றும்  காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள வட்டா ரங்கள் மாதிரி கணக்கெடுப்பு நடத்துவ தற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தக வல்கள் தெரிவிக்கின்றன. இறுதியாக 2011ல் நடத்தப்பட்ட மக்கள்  தொகை கணக்கெடுப்பின் படி நாட்டின் உத்தேச மக்கள் தொகை 121 கோடியே 2 லட்சமாக இருந்த நிலையில், அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் 7ஆவது இடத்தில் இருந்த தமிழத்தின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958ஆக இருந்தது.