அத்தியாவசிய பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு - தமிழக முதல்வருக்கு சிஐடியு கடிதம்
சென்னை, மார்ச் 30- அத்தியாவசிய பணிபுரியும் தொழிலாளர் களுக்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதி களை செய்துதர வேண்டும் என்று வலியுறுத்தி தமி ழக முதல்வருக்கு சிஐடியு கடிதம் அனுப்பி யுள்ளது. இதுதொடர்பாக சிஐடியு மாநிலப் பொதுச்செய லாளர் ஜி.சுகுமாறன் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கொரோனா கிருமி தாக்கு தலில் இருந்து மக்களை பாதுகாத்திடும் வகை யில் ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கை களை தமிழக அரசு எடுத்துவருவது பாராட்டு தலுக்குரியதாகும். அதே வேளையில் மக்களின் அத்தியாவசிய அன்றாட தேவைகைளை பூர்த்தி செய்திட தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதோடு தமி ழக தொழிலாளர்கள் ,அதிகாரிகள் பல்வேறு பணி களை போர்க்கால அடிப்படையில் செய்து வரு கின்றனர்.
அத்தியாவசிய பணிகளான மின்சார விநியோ கம் , பராமரிப்பு, உள்ளாட்சி துப்புரவுப் பணிகள், பால் விநியோகம், மருந்து மற்றும் இதர சேவை களை செய்திட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்ற னர். இந்த தொழிலாளர்கள் பணிக்கு வர மற்றும் வீடு திரும்ப போக்குவரத்து மற்றும் உணவு ஏற்பாடு களை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். வல்லூர் மின் நிலையத்திற்கு பணிக்குச் செல் லும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு காவல்துறை யின் கெடுபிடிகளை சமாளித்து பணிக்கு செல்ல அடையாள அட்டை வழங்க வேண்டும்.
கனிம-தேயிலை தொழிலாளர்களை வேலைக்கு அழைப்பதை தவிர்த்திடுக!
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு கனிம நிறுவனம் தனது ஊழியர்களை குறிப்பாக சுரங்க தொழிலாளர்கள் வேலைக்கு வர வேண்டும் என அறிவித்துள்ளது. சுரங்க பணிகளில் தொழி லாளர்கள் மட்டுமல்ல ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளும் ஈடுபட்டால் தான் பணிகள் முழுமையாக நடைபெறும் நிலை உள்ளது. மத்திய அரசு நிலக்கரி சுரங்க தொழில் மட்டுமே அத்தியா வசிய தொழிலாக தற்போது அறிவித்துள்ளது. தமி ழகத்தில் கனிம தொழிலை அத்தியாவசிய தொழி லாக கருதாமல் அவற்றிக்கு விதிவிலக்கு அளித்து தொழிலாளர்களை வேலைக்கு அழைப்பதை தவிர்க்க வேண்டும்.
அதே போன்று நீலகிரி மாவட்ட தேயிலை தொழிலும் அத்தியாவசிய தொழில் என்று அரசு அறிவித்துள்ளது. தோட்டங்களில் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று முதலாளிகள் வற்புறுத்து கின்றனர். அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தர விற்கு எதிரானதாகும். ஆகவே இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும். நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் பணியாற்றும் தூய்மை பணியா ளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும். அதே நேரத்தில் பல மாவட்டங்களில் தொழிலாளர்களுக்கு சாதாரண சூழ்நிலையில் வாங்கும் ஊதியத்தை விட குறைத்து தருவதாக புகார்கள் வந்துள்ளன. அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு சரி செய்ய வேண்டும்.
கொரோனா பாதிப்பு பற்றியதான விழிப்பு ணர்வு மற்றும் பல்வேறு பணிகளை செய்திட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் கிராம நல ஊழி யர்களை பணிக்கு வர வேண்டும் என அறிவித்துள் ளது. அந்த பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதி களை செய்து தர வேண்டும்.
கொரோனாவை எதிர்கொள்ள மனிதகுலத்தை மீட்க ஊரடங்கு,சமூக தனிமைப்படுத்துதல் போன்ற மிக முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து தமி ழக மக்களை பாதுகாக்கும் அரசு தற்போது அத்தி யாவசியமில்லாத தொழில்களை அத்தியாவசிய தொழில் என்று அறிவித்து தொழிலாளர்களை வேலைக்கு வர சொல்லுவதை கைவிட வேண்டும். இதனால் மக்களை பாதுகாக்க தமிழக அரசு எடுக்கும் முயற்சிகள் அதன் நோக்கம் வீண்போகும் நிலை ஏற்படும் என்று சிஐடியு கவலை கொள்கி றது. ஆகவே தமிழக அரசு உடனடியாக தமிழக டாமின் மற்றும் நீலகிரி தேயிலை தோட்ட தொழிலை துவக்க அனுப்பப்பட்ட ஆணைகளை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.