tamilnadu

img

பஞ்சாலைகளை பாதுகாக்க....

புதுச்சேரியின் பாரம்பரியமான ஏ.எப்.டி, சுதேசி,பாரதி ஆகிய மூன்று பஞ்சாலைகளை புனரமைக்க உரிய நிதி வழங்க வேண்டும். பஞ்சாலைகளை பாதுகாக்க புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முடிவுகளை மத்திய ஜவுளிக் கழகம் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தில்லி நாடாளுமன்றம் எதிரில் உள்ள ஜந்தர் மந்தரில் புதுச்சேரி அனைத்து பஞ்சாலை தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அபிஷேகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஐஎன்டியூசி தலைவர் ரவிசந்திரன், சிஐடியு புதுச்சேரி பிரதேச தலைவர் கே.முருகன், துணைத் தலைவர்கள் குணசேகரன், ஆவணியப்பன், ஏஐடியூசி மாநில நிர்வாகிகள் சேதுசெல்வம், தினேஷ் பொன்னையா, பிஎம்எஸ் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிஐடியு அகில இந்திய செயலாளர் கருமலையான், சிபிஎம் மூத்தத் தலைவர் தா.முருகன், புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், சிபிஐ தேசிய பொதுச் செயலாளர் து.ராஜா, புதுச்சேரி முன்னாள் செயலாளர் விசுவநாதன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர்.