இந்துத்துவ அமைப்புகள் பெரியார் கொள்கை ரீதியான எதிர்ப்பை காட்ட தைரியம் இல்லாமல் ,பெரியார் சிலைகள் மீது எதிப்பை காட்டுவது தொடர்ந்து வருகிறது.
கோவை சுந்தராபுரத்தில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி பல்வேறு கட்சிகள் வழியுறுத்தப்பட்டது மக்களுக்கு தெறிந்ததே. அதனால் பெரியார் சிலை அமைந்துள்ள இடங்களில் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதைப்போன்று ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி பிரகாஷ் காவி சாயம் பூச முயற்சித்தார். பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்து கைது செய்துள்ளனர்.