சென்னை, அக். 28- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்களும் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி இந்த போராட் டத்தில் அவர்கள் ஈடுபட்டு வரு கிறார்கள். அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் மருத்துவர்கள் பணிக்கு வராததால் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முது நிலை பட்ட மேற்படிப்பு மாணவர் களைக் கொண்டு நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்கப்படு கிறது. இதனால் வார்டுகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளி களுக்கு முழுமையான சிகிச்சை கிடைக்க வில்லை. உள்நோயாளி களாக தங்கி சிகிச்சை பெறுபவர்க ளுக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைகள் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.
அவசர அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் மட்டும் மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புற நோயாளிகள் பிரிவில் போது மான அளவு மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பாதிக்கப் பட்டனர். மருந்து, மாத்திரை, பரி சோதனை முடிவுகளை பார்த்து சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்து வர்கள் இல்லாததால் பொது மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் காய்ச்சல், கை கால் வலி, சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெறுபவர்கள் அவர்க ளுக்கு புற நோயாளிகள் பிரிவில் 10 நாட்கள், 15 நாட்களுக்கு மொத்தமாக மாத்திரை வழங்கப்படுவது வழக்கம். மருத்துவரின் பரிசோத னைக்கு பிறகு பரிந்துரை செய்த மருந்து, மாத்திரை வழங்கப்பட வேண்டும். இது போன்று சிகிச்சை பெறக்கூடியவர்கள் மருத்துவர்கள் இல்லாததால் நீண்ட நேரம் காத்து இருந்த னர். வழக்கமாக பணியாற்றக்கூடி யவர்கள் இல்லாததால் பயிற்சி மருத்துவர்கள் மூலம் புற நோயாளிகள் பிரிவு செயல் பட்டது.
இந்த நிலையில் போராட் டத்தில் ஈடுபட்டு வரும் மருத்து வர்கள் பிரச்சனை குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வராததால் போராட்டம் தீவிரம் அடைகிறது.ஏற்கனவே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்து வர் பெருமாள்பிள்ளை உள்பட 5 பேர் சாகும்வரை உண்ணா விரதத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். தீபாவளி பண்டிகைக்குள் மருத்துவர்கள் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப் பட்டது.