சென்னை,ஆக.12- தமிழகத்தில் உள்ள 9 பொறியியல் கல்லூரிகளில் பகுதிநேர பி.இ., பிடெக். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பகுதிநேர பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை செயலாள ரும், கோயமுத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வருமான வி.செல்லதுரை கூறியதாவது: ’பகுதி நேர பி.இ., பி.டெக்., படிப்பு களுக்கு www.ptbe-tnea.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க லாம். கணினி, ஆண்ட்ராய்டு செல்போன், இணையதள வசதி இல்லாத வர்கள் தமிழகம் முழுவதும் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கு அமைக்கப் பட்டுள்ள அதே மையங்களில் பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர வும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.600. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் ரூ.300 செலுத்த வேண்டும். இதை ‘செயலாளர், பகுதிநேர பி.இ., பிடெக் படிப்பு சேர்க்கை, கோயமுத்தூர்’ என்ற பெயருக்கு வரைவோலையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்லைனில் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் வரை வோலையை இணைத்து ‘செயலாளர், பகுதிநேர பி.இ., பிடெக். படிப்பு மாண வர் சேர்க்கை, கோயமுத்தூர் தொழில் நுட்பக் கல்லூரி (சிஐடி), அவிநாசி ரோடு, கோவை- 641014’ என்ற முகவரிக்கு வரும் ஆக. 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக ஏதேனும் ஒரு நிறு வனத்தில் பணிபுரிந்து வருபவர்களாக இருக்க வேண்டும். ஏற்கெனவே 2 ஆண்டு கள் பணியாற்றி, தற்போது வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்’. இவ்வாறு அவர் கூறினார். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பத்தின் நிலை குறித்து செப்டம்பர் 10 ஆம் தேதி அறிந்து கொள்ள லாம் என்று பகுதிநேர பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் எஸ்.இளங்கோ தெரிவித்தார்.