ஸ்ரீநகர், ஆக. 4- இந்திய நாடாளுமன்றம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவை ரத்து செய்திடும் கொடூரமான நடவடிக்கையை எடுத்து ஓராண்டு நிறைவடை கிறது என்பதை வரும் ஆகஸ்ட் 5 குறிக்கிறது. அதன் பிறகு கடந்த ஓராண்டு காலத்தில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு-காஷ்மீர் என்றும் லடாக் என்றும் இரு யூனி யன் பிரதேசங்களாகப் பிரிக்கப் பட்டு, சிதைக்கப்பட்டிருக்கிறது. இந்துத்துவா ஆட்சியாளர்கள், அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ் தின் அடிப்படையில் சுயாட்சி வழங்கப்படும் என்று அம்மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போது காஷ்மீர் மக்களுக்கு அளித் திட்ட உறுதிமொழியை, ஒரே கை யெழுத்தின்கீழ் மீறித் துரோகம் இழைத்துள்ளார்கள். மேலும், இந்தி யாவின் மாநிலங்களில் ஒன்றாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இருந்த தையே ஒழித்துக்கட்டும் விதத் திலும், அதன் மூலம் அம்மாநில மக்களை அவமானப்படுத்தும் வித த்தில் நடவடிக்கைகளைத் தொட ர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த ஓராண்டில் மாநிலமே ஒரு மிகப்பெரிய சிறைக்கூடமாக மாற்றப்பட்டிருக்கும் கொடூரமான செயல் நடந்தேறியிருக்கிறது.
சுமார் 40 ஆயிரம் துருப்புக்கள் அங்கே நிலைநிறுத்தப்பட்டிரு க்கின்றனர், மாநில அளவில் ஊரடங்கு பிறப் பிக்கப் பட்டிருக்கிறது, மொபைல் போன் மற்றும் டெலிவிஷன் உட்பட அனைத்துத் தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன, வீடு களுக்கு வெளியே இயங்குவது தடைசெய்யப்பட்டிருக்கிறது, ஊடகங்கள் முடக்கப்பட்டிருக் கின்றன. பாஜக-வைத் தவிர இதர அரசியல்கட்சித் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அனைவரும் மற்றும் பொது ஆளுமையுடனுள்ள அனைவரும் மிகக் கொடிய பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எவ்வித எழுத்துப் பூர்வ ஆணைகளுமின்றி கைது செய்யப்பட்டிருக்கின்றனர், அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இத்தகைய ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து காஷ்மீர் மக்களும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக் கின்றன. இந்த நிலையில் இன்றைய தினத்தை (ஆகஸ்ட் 5) வேண்டு மென்றே பாஜக அரசு, அயோத்தி யில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைக்கான நாளாக நிர்ண யித்திருக்கிறது என்பதும் கவனிக் கத்தக்கது.