tamilnadu

img

பஞ்சாயத்து தலைவர் பதவியில் 2 பேருக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

காரைக்குடி,ஜன.3- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்தில் 2  பெண்களுக்கு தலைவர் பத விக்கான வெற்றிச் சான்றிதழ் வழங்கியுள்ள வினோத சம்ப வம் நடந்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளா ட்சித் தோ்தல் 27 மாவட்ட ங்களில் மட்டும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. ஜனவரி 2 அன்று தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, 3 ஆம் தேதியன்றும் தொடர்ந்து நடை பெற்றது.  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் யூனியனுக்கு ட்பட்டது சங்கராபுரம் பஞ்சா யத்து.  இங்கு பஞ்சாயத்து தலை வர் பதவிக்கு தேவி என்பவ ரும் பிரியதர்சினி என்பவரும் போட்டியிட்டனர்.  இந்த நிலையில் வியாழ னன்று இரவு 10 மணிக்கு தேவி  வெற்றி பெற்றதாக அறிவி க்கப்பட்டு, வெற்றிச்சான்றி தழும் வழங்கப்பட்டது. பிரிய தர்சினி தரப்பினர் மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என்று கோரினர். மாவட்ட தேர்தல் பார்வையாளர் கருணாகரன், மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயகாந்தன் அங்கு வந்த னர். காலை 5 மணிக்கு 63 வாக்கு கள் வித்தியாசத்தில் பிரிய தர்சினி வெற்றி பெற்றதாக அறி விக்கப்பட்டது. அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.  சங்கராபுரம் பஞ்சாயத்தில் 2  பெண்களுக்கு வெற்றிச்சான்றி தழ் வழங்கப்பட்டது குழப்ப த்தை ஏற்படுத்தியுள்ளது.

;