tamilnadu

img

வடகிழக்கு பருவ மழை 9 விழுக்காடு குறைந்தது

சென்னை, நவ. 20- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், மழைப்பொழிவு, வழக்கத்தை விட, 9  விழுக்காடு குறைந்திருப்பதாக, சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கி றது. அடுத்த 2 நாட்களுக்கு, லேசானது  முதல் மிதமான மழைக்கும், 7 மாவட்டங்க ளில் கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக கூறியிருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில், வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அக்டோபர் மாதம்  ஒன்றாம் தேதி முதல், இன்று வரை பதிவான  மழைப்பொழிவு குறித்த தகவல்களை வெளியிட்டார். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், அடுத்த 2 நாட்களுக்கு, வெப்பச்சலனம் மற்றும் லேசான காற்றழுத்த தாழ்வு நிலை  காரணமாக, ஒரு சில இடங்களில், லேசா னது முதல் மிதமானது வரையில் மழைக்கு  வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறி யிருக்கிறார். கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்ச மாக கடலூர் மாவட்டம் புவனகிரியில் 8 செ. மீட்டரும், காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்  கநல்லூரில் 7 செ. மீட்டரும் மழைப்பதிவாகி யுள்ளது.