tamilnadu

img

பராமரிப்பின்றி மூலக்கொத்தளம் மயானம் சுற்றுச்சூழல் பாதிப்பால் பொதுமக்கள் அவதி

வண்ணாரப்பேட்டை அருகே உள்ள மூலக் கொத்தளம் மயானம் முறையான பராமரிப்பின்றி பொது மக்களுக்கு தொற்றுநோய் பரப்பு மையமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மூலக்கொள்ளதம் சுடு காடு, 125 ஆண்டு பழமை வாய்ந்தது.  தற்போது   சிதிலம் அடைந்து சுற்றுச்  சூழலுக்கு சவால்விடும் அளவிற்கு  சீரழிந்துள்ளது. இதற்கு ஆட்சியா ளர்களின் மெத்தனமே காரணம்  என்று கூறப்படுகிறது. பல இடங்க ளில் சுற்றுச்சுவர் தகர்க்கப்பட்டுள்ள தால் இரவு நேரங்களில் மயானம்  சமூக விரோதகளின் கூடாரமாக மாறிவிடுகிறது. இதன்மீது மாநக ராட்சி அல்லது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காதது பல சந்தேகங்களை எழுப்புவதாக அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வ லர்கள் தெரிவிக்கின்றனர்.  மூலக்கொத்தளம் சுடுகாடு 35.43  ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில்  சுடுகாட்டு பயன்பாட்டிற்கு 23.92 ஏக்கர் நிலம் போக, 11.51 ஏக்கர் நிலம் பயன்பாடின்றி கிடந்தது. அதனை சென்னை மாநகராட்சி, குடிசைமாற்று வாரியத்திற்கு நில  மாற்றம் செய்து கொடுத்தது. அந்த இடத்தில் மூலகொத்தளம் குடிசைப்பகுதி மக்களுக்கு 138 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1044  வீடுகள் கட்டிக் கொடுத்தது. இந்த குடியிருப்பிலிருந்து, வெளியேறும் கழிவுநீர் மயா னத்தில் உள்ள சமாதிகளை சூழ்ந்துள்ளது. தங்கள் மூதாதையர் நினைவிடங்களை சாக்கடை கழிவுநீர் சூந்திருப்பதை காணும் உறவினர்கள் மனச்சங்கடத்திற்கு ஆளாகின்றனர்.

மூலக்கொத்தளம் மயான மேம்பாட்டிற்காக தமிழக அரசு வகுத்த திட்டங்கள் கிடப்பில் கிடக் கின்றன. குறிப்பாக, கல்லறைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்தல், மரம் நடுதல், தோட்டம் அமைத்தல், பூங்கா, பொதுக்கழிப்பிடம், கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகளை பாதுகாத்தல் உள்ளிட்ட அம்சங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஆட்சியாளர்களின் ஆதரவோடு சில தனிநபர்கள் சுடுகாட்டில், பல  நூறு சதுர அடி நிலத்தை ஆக்கிர மித்து கோவில் கட்டி வருகின்றனர். சுடுகாட்டிற்குள் கட்டட கழிவு கள் கொட்டுவது, சுத்தம் செய்வது போல் கல்லறைகளை இடித்து தள்ளுவது வாடிக்கையாக உள்ளது. எலும்புக் கூடுகள் குப்பை களைப் போல் குவிந்து கிடக்கிறது.  மரித்தவர்களின் நினைவு நாளில்  சடங்குகள் கூட செய்ய முடியாமல்  மக்கள் மன உலைச்சல் அடை கின்றனர்.  இந்த சுடுகாட்டில்தான் மொழிப்  போர் தியாகிகள், முன்னாள் அமைச்சர்களின் கல்லறைகளும் உள்ளன. எனவே, இந்த சுடு காட்டை சுத்தப்படுத்தி, தூய்மை யாக வைக்க சென்னை மாநக ராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். மூலக்கொத்தளம் பகுதியில் கொரானா பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரானாவால் உயிரி ழந்தவர்களின் உடலை சுகா தாரத்துறையே அடக்கம் செய்கி றது. இருந்தாலும், இறந்தவரின் உறவினர்களிடம் 7 ஆயிரம் ரூபாய்  வரை வலுக்கட்டாயமாக வசூ லிக்கின்றனர். ஊரடங்கால் வருமா னம் இல்லாத நிலையிலும்  பொது மக்களிடம் இப்படி கேட்பது எந்த  விதத்தில் நியாயம்? என்று அப்பகுதி  மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடசென்னை மாவட்டப் பொருளாளரும், அந்தப்  பகுதிவாசியுமான எஸ்.முருகேசனி டம் கேட்டபோது, “மூலக்கொத்த ளம் ராம்தாஸ் நகர், காட்பாடாவில் அடிப்படை வசதிகள் இன்றி பொது மக்கள் அவதிப்படுகின்றனர். கழிவுநீர் அடைப்பால் சாலைகள் சாக்கடையாகி வருகின்றன. இதில் சுடுகாடு பிரச்சனை பெரும்பாடாக மாறிவருகிறது. கொரானா நோய்  தொற்று தாக்குதலுக்கு இலக்கான  இடமாக இந்தப்பகுதி உள்ளது. அரசு, மாநகராட்சி அதிகாரிகளிடம பலமுறை எடுத்து கூறியும் யாரும் செவிசாய்ப்பதாக இல்லை. இந்நிலை நீடித்தால் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளளோம்” என்றார்.  

- ம.மீ.ஜாபர்