tamilnadu

img

போராடிப்பெற்ற உரிமைகளை பாதுகாக்க ஒன்றிணைவோம்!

தொழிலாளர்களுக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., மேதின வாழ்த்து

கோவை, ஏப்.30 – ஊரடங்கு காலத்தில் உழைப்பாளி மக்களை கையேந்த வைத்துவிட்டு, கார்ப்பரேட்டுகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதும், 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தும் சூழ்ச்சியை முறியடிப்போம். போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாக்க உழைப்பாளி வர்க்கம் ஒன்றிணைய மே தின நாளில் சபதமேற்போம் என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: அனைத்து உழைப்பாளி மக்களுக்கும் சிறப்பான மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  இந்த ஆண்டு கடந்த நூறாண்டு காலத்தில் உலகம் சந்திக்காத வகையில் கொரோனா தொற்று நோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு கால த்தை பயன்படுத்திக் கொண்டு குஜராத் முதலாளிகள், கார்ப்பரேட் முதலாளிகள் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றுவதற்கு கோரிக்கை வைத்திரு க்கிறார்கள். ஆரம்பத்திலிரு ந்தே கார்ப்பரேட் முதலாளிக்கு சாதகமாக செயல்படுகிற மத்திய பாஜக அரசு தற்போது இந்த வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த ஒப்பு கொண்டு இருக்கிறார்கள் என்பதும், பாஜக ஆளும் சில மாநி லங்களில் அரசாணை யாகவே வெளியிட்டு இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் 40 கோடி உடல் உழைப்பு தொழிலாளர்களை திட்டமிட்டு மத்திய அரசு வஞ்சிக்கிறது. மறுபுறம் இந்திய நாட்டு மக்களை ஏமாற்றி மிகப்பெரிய அளவில் கடன்களை பெற்றுள்ளவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்கிறது.

இந்த 6 ஆண்டு காலத்தில் பாஜக அரசு ஒரு பொதுத்துறை நிறுவனத்தை கூட உருவாக்காத அரசு என்பதும், இந்த அரசை எதிர்த்து நடத்துகின்ற போராட்டத்தில் உழைப்பாளி வர்க்கம் உறுதியாக நிற்க வேண்டும் என்கிற சூளுரையை இந்த மே தின நாளில் உறுதியேற்போம். போராடி பெற்ற உரிமைகளை தக்க வைப்பதும், எக்காரணம் கொண்டும் அதனை விட்டுக்கொடுக்காமல் பாதுகாக்க ஒன்றுபட்டு போராடுவோம்.

தேசத்தின் மீது அக்கறை கொண்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், கொரோனா வுக்கு பிந்தைய காலத்தை கணக்கிட்டு, பெரு முதலாளிகளுக்கு 4 சதவீதம் வரியை உயர்த்து வதன் மூலம் கிடைக்கும் வருவா யை தேசத்தின் பொருளாதாரத்தை முன்னுக்கு கொண்டு வர பயன்படும் என்றார்கள். தேசப்பற்றோடு இவர்கள் முன்வைத்த ஆலோசனையை ஏற்பதற்கு மாறாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என மிரட்டுவது, வழக்கு பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. பெரு முதலாளிக்களுக்கு எதிராக யார் கருத்து சொன்னாலும் அவர்கள் மீது வழக்கு போடுவது என்பது, சிறையில் அடைப்பது என்று அச்சப்படுத்துகின்ற  நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. ஆகவே இதுபோன்ற நிலையை  எதிர்த்தும், தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையையும், உரிமையையும் பாதுகாக்க ஒன்றுப்பட்டு போராடுவோம் என  மே தின நாளில் சபதமேற்போம். இவ்வாறு பி.ஆர். நடராஜன் தெரிவித்துள்ளார்.