tamilnadu

img

செய்தியாளர் சந்திப்புகளை தவிர்க்க அரசுக்கு பத்திரிகையாளர்கள் வேண்டுகோள்

சென்னை, ஏப். 13- செய்தியாளர் சந்திப்புகளை தவிர்க்க  தமிழக அரசுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து இணைச் செயலாளர் பாரதி தமிழன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது: உலகம் முழுவது அச்சுறுத்தும் கொரோனா  தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது.  காவல்துறையினர், மருத்துவத்துறையினர், தூய்மைப் பணிபுரிவோர்  போன்று இரவும் பகலு மாக பத்திரிகையாளர்கள்  ஆபத்தான சூழலில் பணி யாற்றி வருகிறார்கள்.

கொரோனா நோய்த்தொற்றை தடுக்க – முறிய டிக்க உலகின் பல நாடுகள் போராடி வருகின்றன.  சமுகவிலகலே இந்த கொரோனா நோய்த்தொற்றை  பரவாமல் தடுக்கும் என்ற நிலையில் செய்தி யாளர்களுக்கு எந்தவிதமான உரிய பாதுகாப்பு கவ சங்கள் இல்லாத நிலையில் மருத்துவமனை வளா கங்களிலும் மற்ற இடங்களிலும் நெருக்கமான சூழலில் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துவது நோய்த்தொற்றை பரப்பும் வாய்ப்புகளை அதி கரிக்கவே செய்யும்.

மக்களுக்கு சென்றடைய வேண்டிய முக்கிய மான செய்திகளை தெரிவிக்க காணொளிகள், டிஜிட்டல் செய்தியாளர் சந்திப்பு, தினசரி ஊடக  அறிக்கைகள் ஆகிய வழிமுறைகள் கடைப்பிடிக்க தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம்  வலியுறுத்துகிறது.  மேலும் கொரோனா நோய்த்தடுப்பு பணிகளில் முகம் தெரியாமல் தியாக  உணர்வுடன் பலர்  பாடுபட்டுக் கொண்டிருக்க இன்றைய தேவை விழிப்புணர்வு மட்டுமே. கொரோனா காலக்கட்டத்தில் அரசின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளுக்கு தொலை பேசி வாயிலாகவே பதில் தரக்கூடிய அளவில் சுகாதாரம், உள்ளாட்சி ஆகிய துறைகளில் மூத்த  அதிகாரிகளை அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பா ளர்களாக நியமித்து அவர்களது விவரங்களை ஊடகங்களுக்கு தெரிவிப்பது என்பது தேவைப்  படும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை  காண உதவும். இதை உடனடியாக நடைமுறைப்ப டுத்த தமிழக அரசு முன்வரவேண்டும் என்று கேட்டுக்  கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.