tamilnadu

img

பட்டினி கிடக்கும் தொழிலாளர்கள்: கண்டுகொள்ளாத பீடி ஆலை முதலாளிகள்

வேலூர், ஏப்ரல் 15- ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 50 ஆயி ரம்  தொழிலாளர்கள் பீடி சுற்றும் தொழிலில் பல ஆண்டு காலமாக ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவால் இந்த தொழிலாளர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

ஏற்கனவே 21 நாட்கள் வேலை இல்லாமல் இருந்த  பீடி தொழிலாளர்கள் மேலும் 17 நாட்கள் வேலை வருமானம் இல்லாமல் பசி, பட்டினியால், துன்பப்ப டும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வேலை யிழந்ததால் வருமானத்திற்கு வழியின்றி திண்டாடி வரும் பீடி தொழிலாளர்கள் தங்களுக்கு நிவார ணம் வழங்க வேண்டும் என்று  ஆலை முதலாளி களிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஒருவரும்  தொழிலாளர்களின் கோரிக்கையை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

தங்களின் குடும்பத்தை நகர்த்திச் செல்ல வரு மானமே இல்லாமல் பரிதவித்து வரும் பீடித் தொழி லாளர்கள் வேறு வழியின்றி  ஆலைகள் முன்பு முற்று கைப் போராட்டம் நடத்துவதற்கு தயாராகிவிட்டனர். மத்திய மாநில அரசுகளின் உத்தரவை மதிக்கா மல் செயல்படும் பீடி ஆலைகளுக்கு எதிராக வீதியில்  இறங்கி போராடுவதை தவிர்க்க ஒவ்வொரு வருக்கும் தலா 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க  வேண்டும் என்று பீடி தொழிலாளர்கள் அனைத்து  சங்க நிர்வாகிகள் சரவணன் சிஐடியு, சுப்பிரமணி  ஏஐடியூசி,  கலைநேசன் தொமுச, தட்சிணாமூர்த்தி குமரவேல் ஏடிபி உள்ளிட்டோர் தமிழக அரசுக்கும்  மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ள னர்.