அரசு மருத்துவர் களின் போராட்டம் வெற்றி பெற்றிட, அனைத்து அரசியல் இயக்கங்களும், ஜனநாயக அமைப்புகளும் ஆதரவைத் தெரிவித்து வருகின்றன. டெங்கு, சிக்கன்குனியா மற்றும் விஷக்காய்ச்சல் அதிகரிப்பால் மக்களுக்குத் தீவிர மருத்துவசேவை தேவைப்படுகிற சூழலில், மிக முக்கியமான அத்தி யாவசியப் பணியான மருத்துவ சேவைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத அளவில் அரசு இந்தப்பிரச்சனைக்கு அவசரத்தீர்வு காண வேண்டும். மாநில அரசு மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாகத் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி அரசு மருத்துவர்களின் நியாய மான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து...