tamilnadu

img

பண்டிகை காலம்: பூக்கள், பழங்களின் விலை அதிகரிப்பு

சென்னை, அக். 6 ஆயுத பூஜை மற்றும் விஜயத சமியை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில், பூக்கள், பழங்களின் விலை அதிகரித்து ள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள், பழங்கள் மற்றும் வழிபாட்டிற்குத் தேவையான பொருட்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. வழக்கமாக ஆயுத பூஜைக்கு முன்தினம் அதி காலையில் கோயம்பேடு சந்தை யில் மக்கள்  திரண்டு தங்கள் வீடுகளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மக்கள் கூட்டம் குறைவாக உள்ள தாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

பூக்கள் மற்றும் பழங்களின் விலை சற்று அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.ஆனால் பண்டிகை காலங்களில் விலை அதிகரிப்பது வழக்கமானது தான் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். கோயம்பேடு சந்தை யில் காய்கறிகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு தேங்காய் 25 ரூபாய் தொடங்கி 40 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஒரு கிலோ மல்லிகைப் பூ ஆயிரத்து 200 ரூபாய்க்கும், சாமந்தி கிலோ 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதேபோல் ரோஜா, பிச்சிப் பூக்களின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. பழங்களில், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது.சேலம் சேலம் வ.உ.சி பூ மார்க்கெட்டில் பூக்கள் கிலோ 50 முதல் 100 ரூபாய்  வரை  அதிகரித்தி ருக்கிறது. பூசணிக்காய் கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.