tamilnadu

img

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பெயரில் போலி ஆவணம்

சென்னை,ஜூலை 22- தனியார் மருத்துவக் கல்லூரி  தொடங்குவதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர்  பெயரில் போலி ஆவணம் தயா ரித்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ரமண சேரி கிராமத்தில் டி.டி.மெடிக்கல் அண்ட் எஜூகேஷன் டிரஸ்ட் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்  கிறது என 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதியன்று அப்  போதைய மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் அனுமதி கொடுத்தது போன்று போலி ஆவணம் தயா ரித்து இந்திய மருத்துவக் கவுன்சி லுக்கு இ மெயில் மூலம் அனுப் பப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்திய  மருத்துவக் கவுன்சில் உதவிச் செயலாளர் சவிதா, தமிழ் நாடு  மக்கள் நல்வாழ்வுத்துறை செய லாளருக்கு மார்ச் 26 ஆம் தேதி யன்று கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் 2018 ஆம் ஆண்டு பிப்ர வரி 11ஆம் தேதியன்று இ மெயில்  மூலம் அனுப்பிய கடிதத்தினை  உறுதி செய்ய கேட்டுக் கொண்  டுள்ளார். பின்னர், அந்த கடித் தத்தை பார்த்த அலுவலர்கள் கடும் அதிர்ச்சிய டைந்துள்ளனர். தங்கள் துறையிலிருந்து அளிக்  காத ஒரு கடிதத்தில் செயலாள ரின் கையொப்பம் இருந்துள்ள தால் அதனை மறுத்து மீண்டும்  இந்திய மருத்துவக் கவுன்சி லுக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

இது தொடர்பாக, மக்கள் நல்  வாழ்வுத்துறையின் தற்போதைய செயலாளர் பீலா ராஜேஷ் ஏப்ரல்  9ஆம் தேதியன்று இந்திய மருத்து வக் கவுன்சிலின் பொதுச் செயலா ளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,  இ மெயில் மூலம் கடி தம் அனுப்பியதாக கூறப்பட்டது  போலியானது. ஏற்கனவே, இந்த  மருத்துவக் கல்லூரியின் அங்கீ காரம் மற்றும் அனுமதியை இந்திய மருத்துவக் கவுன்சில்  ரத்து செய்தது. இதனடிப்படை யில், முதல் முறையாக முறைப் படி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் அரசு  மருத்துவக் கல்லூரியில் சேர்க் கப்பட்டுள்ளனர்.  இந்த மருத்துவக் கல்லூரி மீதான குற்றவியல் வழக்கு நிலு வையில் உள்ளது. எனவே இந்த  கல்வி நிறுவனத்தை தொடங்குவ தற்கான திட்ட அறிக்கைக்கு அரசு  எங்கும் அனுமதி அளிக்க வில்லை. மேலும் இந்திய மருத்து வக் கவுன்சிலுக்கு எந்தவிதமான கடிதமும் அளிக்கப்படவில்லை. எனவே இக்கடிதம் போலியானது, அதற்கான சட்ட நடவடிக்கையை இந்திய மருத்துவக் கவுன்சில் மேற்கொள்ளலாம் என்று கூறி யுள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பெயரில் போலி ஆவ ணம் தயாரித்து இந்திய மருத்து வக் கவுன்சிலுக்கு அனுப்பி யுள்ளது தற்பொழுது வெளிச்சத் திற்கு வந்துள்ளது. மேலும் இந்த  போலி ஆவணம் அளித்த நிறு வனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்  துறையிலும் புகார் அளிக்கப் பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்  துறை அலுவலர்கள் தெரி வித்துள்ளனர்.

;