சென்னை,நவ.22- சிலைக்கடத்தல் வழக்குகளை விசா ரிக்கும் சிறப்பு விசாரணைக் குழுவின் காலத்தை நீட்டிக்கக் கோரி, பொன். மாணிக்கவேல் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் கடந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி, பணி ஓய்வு பெற்றார். இதனிடையே, சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. அவரது பணிக்காலம் வரும் 30 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்தநிலையில், மேலும் பணி நீட்டிப்பு வழங்குமாறு, பொன்.மாணிக்கவேல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் இன்னும் பல வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உரிய வசதிகள் செய்துதராதது தொடர்பாக, தமிழக அரசு மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவு செய்யும் வரை சிறப்புக் குழுவின் பணிக்காலத்தை நீட்டிக்குமாறு கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.