கொரோனா வைரஸ் பாதிப்பு
தமிழக அரசுக்கு சிஐடியு வேண்டுகோள்
சென்னை, மார்ச் 21- கொரோனா வைரஸ் பாதிப்பு பிரச்சனையில் மக்களின் ஆரோக் கியம், வாழ்வாதார பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை, சிஐடியு கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கை கள் வரவேற்க வேண்டியதே. ஆனால் இந்த நடவடிக்கைகள் மட்டும் போதாது என்பதை சிஐடியு சுட்டிக் காட்டுகிறது. குறிப்பாக பொது மக்கள் மருத்துவ பரிசோதனை செய்வதற்கு வாய்ப்புகளை அதி கப்படுத்துவதும், பொது சுகாதார வசதிகளை மேம்படுத்துவதும் அவசியம்.
முகக் கவசம் மற்றும் அத்தி யாவசிய கிருமி நாசினிகளின் விலையை உயர்த்தி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கொள்ளையடிப்பதை தடுக்க நட வடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் மருத்துவம், துப்புரவு உள்ளிட்ட பணிகளை செய்யும் தொழிலாளர்களை பாதுகாக்கும் கவசங்களை கூடுதலாக வழங்க வேண்டும். கடைகள், சினிமா தியேட்டர் போன்ற மக்கள்கூடும் நிறுவனங்கள் மூடப்பட்டதை தொடர்ந்து, தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இவர்க ளுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்துவதோ, விடுப்பு இழப்பு செய்வதோ கூடாது. கட்டுமான, ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் உள் பட உடலுழைப்பு தொழிலாளர் கள் மிகப் பெரிய வருமான இழப்பை சந்தித்துள்ளனர்.
சுய தொழில் செய்து வாழ்க் கையை நடத்துபவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதித் துள்ளது. பாதிப்புக்கு உள்ளான மக்களை பாதுகாப்பது அரசின் மிக முக்கிய கடமையாகும். எனவே ரேசன் அட்டை வைத்தி ருக்கும் அனைவரும் கொரோனா பாதிப்பு காலத்தில் அத்தியா வசிய பொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்க வேண்டும். நலவாரியங்களில் பதிவு செய் துள்ள அனைவருக்கும், ரேசன் அட்டை வைத்திருப்போருக்கும் உடனடியாக ரூபாய் 5 ஆயிரமும், வங்கியில் கடன் பெற்று ஆட்டோ, டாக்சி வாங்கியுள்ள தொழிலா ளர்களின் தவணையை தள்ளி வைப்பது, மின்சார கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி போன்ற வைகளை ரத்து செய்யவும் தமி ழக அரசு உடனடியாக அறிவிப்பு களை வெளியிட்டு, இந்த அசாதா ரண சூழலில் தவிக்கும் மக்களை பாதுகாக்க வேண்டும் என சிஐடியு தமிழ் மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது.