எந்த ஒரு பிரச்சனையிலும் மதத்தை புகுத்துவது மதவாதிகளின் வாடிக்கை. தனது மிகப்பெரிய பிரச்சார நஞ்சின் மூலம் சங் பரிவாரம் செய்யும் முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரம் இன்று இந்திய அரசாங்கத்திற்கு கடும் தலைவலியை உருவாக்கி இருக்கிறது. அநேகமாக முதல் தடவையாக இஸ்லாமிய நாடுகள் இந்தியாவை நோக்கி தமது குரலை உயர்த்த தொடங்கியுள்ளன. இதன் விளைவாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் பகிரங்க அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. “வைரஸ் மதம் பார்த்து வருவது இல்லை” என மோடியும் அறிக்கை விட வேண்டியதாயிற்று.
அமீரகத்தில் வெறுப்பு பிரச்சாரம்!
இந்தியர்கள் தமது வாழ்வாதரத்திற்கும் வணி கத்திற்கும் அதிகமாக செல்லும் தேசங்களில் வளைகுடா நாடுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. வளைகுடா நாடுகள் இஸ்லாமிய தேசங்கள் என்றாலும் பல நாடுகள் அனைத்து மதங்களையும் அனுமதிக்கின்றன. அவற்றில் ஒன்று ஐக்கிய அரபு அமீரகம் எனப்படும் யு.ஏ.இ. இது எண்ணெய் வளம் மிக்க தேசம் ஆகும். இங்கு தமிழர்கள் உட்பட, எராளமான இந்தியர்கள் வாழ்கின்றனர். பல இந்து கோவில்கள் மற்றும் குருத்துவாராக்கள் கட்டப்பட்டுள்ளன. இஸ்லாமிய மத அடிப்படைவாதம் உட்பட எந்த மதவெறி கருத்தையும் அமீரகம் அனுமதிப்பது இல்லை.
இந்தியாவில் கோவிட் 19 வைரஸை முஸ்லீம்கள்தான் பரப்புகின்றனர் என பா.ஜ.க.தலைவர்கள் உட்பட சங்பரிவா ரத்தினர் மிகப்பெரிய பொய்யான பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டனர். கர்நாடகா பா.ஜ.க. தலைவர் ஒருவர் ‘லவ் ஜிகாத்’தை போல ‘கொரொனோ ஜிகாத்’ முஸ்லீம்கள் கையில் எடுத்துள்ள னர் என பேசினார். தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய தில்லியில் நடந்த தப்ளிக் ஜமாத் கூட்டம் இவர்களுக்கு பெரிய ஆயுதமாக பயன்பட்டது. கிறித்துவர்கள்/யூதர்கள்/பவுத்தர்கள் உட்பட பல மதத்தினரும் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். முஸ்லீம் நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இமாலய உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு முஸ்லீம் எதிர்ப்பு எனும் நஞ்சை மட்டுமே சங் பரிவாரத்தினர் கக்கினர்.
இந்தியாவில் ஒரு பகுதி மக்களிடையே இது தாக்கத்தை ஏற்படுத்தியது போல அமீரகத்தில் வாழும் இந்துக்களிடையேயும் இது பிரதிபலிப்பை உருவாக்கியது. இதன் விளைவாக அங்கு பணி செய்ய அல்லது தொழில் நடத்த சென்ற பா.ஜ.க. ஆதரவாளர்கள் தமது சமூக ஊடகங்களில் இந்திய முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து நாட்டு முஸ்லீம்களுக்கு எதிராகவும் வெறுப்பு பிரச்சாரம் செய்ய முனைந்தனர். இவர்களின் முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு சில உதாரணங்கள்:
1. அமீரகத்தில் வசிக்கும் சோஹன் ராய் எனும் ஒரு திரைபடத் தயாரிப்பாளர் மத வெறுப்பு பற்றி ஒரு காணொலியை வெளியிட்டார். இது கடும் விமர்சனங்களை விளைவித்தது.
எனவே பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.
2. இதே போல மத வெறுப்பு பிரச்சாரம் செய்ததற்காக ராகேஷ் கிட்டுர்மத்/பட்டய கணக்காளர் பால கிருஷ்ணா நக்கா/மித்தேஷ் உதேசி ஆகியோர் தமது நிறுவனங்களால் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
3. துபாயில் வாழும் பிரபல சமையல் நிபுணர் திரிலோக் சிங் என்பவர் குடியுரிமை சட்டத்தை விமர்சனம் செய்ததற் காக ஒரு பெண்ணுக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்தார்.
4. சமீர் பந்தாரி எனும் துபாய் வாழ் முதன்மை அதிகாரி தன் நிறுவனத்தில் பணிக்காக விண்ணப்பித்த முஸ்லீமுக்கு “பாகிஸ்தானுக்கு ஓடு” என மின்னஞ்சலில் பதில் கொடுத்தார்.
5. சவுரவ் உபாத்யாய் எனும் இன்னொரு துபாய் நிறுவன முதன்மை அதிகாரி முஸ்லீம்களை சமூக மற்றும் பொருளாதார புறக்கணிப்பு செய்ய வேண்டும் என கோரினார்.
அமீரகத்தின் எதிர்வினை!
இவையெல்லாம் அமீரகத்தின் பத்திரிக்கைகளில் கடும் விமர்சனங்களை விளைவித்தன. வெறுப்பு அரசிய லின் தீவிரம் எந்த அளவுக்கு இருந்தது எனில் ஷார்ஜா இளவரசி அல் கசேமி கடுமையாக தனது டிவிட்டரில் பதில் அளிக்கும் அளவிற்கு சென்றது. இளவரசி கூறினார்: “நாங்கள் இந்தியர்களுடன் நட்பு பாராட்டும் அரச குடும்பம். நீங்கள் இந்த மண்ணில் உங்களது வருமானத்தை ஈட்டுகிறீர்கள். ஆனால் இதே மண்ணை இழிவுபடுத்து கிறீர்கள். இது கவனிக்கப்படாமல் போகாது. அமீரகத்தில் பாரபட்சமாக நடந்தாலும் இனவாதம் முன்வைத்தாலும் அப ராதம் விதிக்கப்படுவது மட்டுமல்ல; சொந்த தேசங்களுக்கு திருப்பி அனுப்பப்படுவர்.”
இளவரசியின் டிவீட்டுக்கு பிறகு, முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பு உமிழ்ந்த பலரும் தமது சமூக ஊடக செய்திகளை அகற்றிவிட்டனர். சிலர் சமூக ஊடக கணக்கையே நீக்கிவிட்டனர். இவர்கள் என்ன நினைத்து இருந்தனர்? அமீரகம் மோடி ராஜ்யத்தின் ஒரு பகுதி என நினைத்தனரா? தங்களை எவரும் தட்டி கேட்க முடியாது என நினைத்தார்களா? அப்படியே எவராவது கேள்வி கேட்டால் சூப்பர் மேன் போல மோடி வந்து காப்பாற்றிவிடுவார் என மனப்பால் குடித்தனரா?எனினும் இவர்களை மட்டும் குறை சொல்லி பயன் இல்லை. சங்பரிவாரத்தின் நச்சுப்பிரச்சாரம்தான் இவர்கள் மூலம் பிரதிபலித்தது.
தமிழரின் எதிர் பதிவு
2018ம் ஆண்டு கணக்குப்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 95 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் இந்தியர்கள் மட்டும்33 லட்சம். அதாவது மூன்றில் ஒருவர் இந்தியர். இந்த சூழலில் இந்தியாவும் அமீரகமும் முரண்படும் அளவிற்கு இந்த பிரச்சாரம் சென்றால் இந்தியாவுக்குதான் ராஜீய உறவு பிரச்சனைகள் உருவாகும். நட்டம் இந்தியர்களுக்குதான்! ஏனெனில் இந்திய உழைப்பாளிகள் அல்லது நிறுவனங்களின் இடத்தை பிடிக்க பாகிஸ்தான்/வங்கதேசம்/ சீனா/இலங்கை/மாலத்தீ... மற்றும் ஆப்பிரிக்க ஆகிய நாடுகள் தயாராக உள்ளன. சங் பரிவார ஆதரவாளர்களின் வெறுப்பு பிரச்சாரத்தை ஏனைய இந்தியர்கள் கூட ஆதரிக்கவில்லை. இதனை கீழ்கண்ட டிவீட்டுகள் பிரதிபலிக்கின்றன:
நிவ்: “நான் அமீரகத்தில் வாழ்கிறேன். எனது பல இந்து நண்பர்கள் பக்தாஸ். மோடி புகழ்பாடிகள். மோடி யின் கீழ் இந்தியா வல்லரசு ஆகிவிட்டது என எண்ணுகின் றனர். சுவையான விஷயம் என்னவெனில் மோடியின் வல்லர சுக்கு இவர்கள் திரும்பிப் போக ஆர்வம் காட்டுவது இல்லை”
பிரகாஷ்: “அனைத்து இந்தியர்களும் அமீரகத்தை புறக்கணித்தாலும் அமீரகத்திற்கு பாதிப்பு தற்காலிகமா னதுதான்! மிக விரைவில் சீனாவும் ரஷ்யாவும் இந்தியர்க ளின் இடத்தை பிடித்துவிடுவார்கள். இந்தியாவுக்கு எங்கிருந்து எண்ணெய் கிடைக்கும்? பாசிஸ்ட் டிரம்ப் தரமாட்டார்.”
ரொடெக்ஸ்: “இவர்கள் இஸ்லாமிய தேசங்களில் வாழ்கின்றனர். பணம் ஈட்டுகின்றனர். குடும்பங்களை உருவாக்குகின்றனர். இந்தியாவிற்கு திரும்பிச் செல்ல விரும்புவது இல்லை. எனினும் அவர்கள் வாழும் தேசத்தின் மதம் பற்றியும் அவர்களின் வாழ்வு பற்றியும் கொடூரமான கருத்துகளை கூறுகின்றனர். மோடிஜியின் தகவல் நுட்பப் பிரிவு புதிய வெறுப்பு கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. இந்தியா மிகப்பெரிய விலையை தரவேண்டியிருக்கும்”
பிரகலாத் அனுமந்தையா: “பா.ஜ.க தலைவர்களின் பொறுப்பற்ற முட்டாள்தனமான பேச்சுக்கள் வெளிநாட்டு இந்தியர்களின் வாழ்வில் ஆபத்தை தோற்று வித்துள்ளது.”
நெல்சன்: “இவர்களை பொதுவாக இந்தியர்கள் என அழைக்காதீர்கள். இதனை செய்வது பக்தாஸ்தான்! இரண்டுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.”
ஜோஸ்: “இது ஏன் நடக்கிறது எனில் 2014ம் ஆண்டு முதல் நாம் மிக வலிமையானவர்கள் என நமக்கு பொய்யான பெருமை போதிக்கப்பட்டது”
கிரிஷோப்: “விரல்விட்டு எண்ணக் கூடிய சில இந்தியர்களின் பைத்தியக்காரத்தனத்தால் இந்தியா எங்கே போகப்போகிறது?’
விக்னேஷ் பழனிச்சாமி: “அவர்களை இந்தியர்கள் என அழைக்காதீர்கள். ஆர்.எஸ்.எஸ்.பயங்கரவாதிகள் அல்லது சங்கிகள் என அழையுங்கள்”
முருகன்: “நான் இந்து இல்லை. தமிழன். சமூக நீதிக்கு பேர் போன மண்ணில் இருந்து வந்தவன். இந்த சங்கிகளால் எங்களை போன்றவர்களுக்குத்தான் பெரிய ஆபத்து”
-2015ம் ஆண்டு அமீரகம் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி மதம்/இனம்/நிறம் போன்ற எந்த பாகுபாடும் காட்டப்பட்டால் அபராதம் மட்டும் அல்ல; சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் அபாயமும் உண்டு. இந்த சட்டம் இஸ்லாமிய பயங்கரவாத கருத்துகளுக்கு எதிராகவும் பாய்ந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. சங் பரிவாரங்கள் இனியாவது மத வெறுப்பு பிரச்சா ரத்தை நிறுத்துவார்களா? இது மில்லியன் டாலர் கேள்விதான்!