சென்னை, ஜூலை 17 - தமிழகத்தில் 1,412 வழித்தடங்களில் பேருந்துகளை நிறுத்திவிட்டதாக போக்கு வரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் கூறினார். சட்டப்பேரவையில் செவ்வாயன்று (ஜூலை 16) போக்குவரத்துத் துறை மானி யத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில ளித்த அவர் மேற்கண்ட தகவலை கூறினார். மேலும் அவர்கூறுகையில், தினசரி பேருந்து கள் 87 லட்சத்து 59 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இயக்கப்பட்டது. அதை 84 லட்சம் 9ஆயி ரம் கிலோ மீட்டராக (3 லட்சத்து 50 ஆயிரம் கிலோ மீட்டர்) குறைத்துவிட்டோம் என்றார்.
பழைய பல்லவி...
மேலும் பேசிய அமைச்சர் (கடந்த ஒன்றரை வருடமாக திரும்ப திரும்ப கூறுவதையே மீண்டும்) 100 மின்சாரப் (பேட்டரி) பேருந்து கள் கொள்முதல் செய்து, 80 சென்னையிலும், 10 மதுரையிலும், 10 கோவையிலும் இயக் கப்படும். அசோக் லேலண்ட் நிறுவனம் சோதனையோட்டத்திற்கு கொடுக்கவுள்ள 2 பேருந்துகள் ஓரிரு வாரங்களில் சென்னையில் இயக்கப்படும் என்றார்.
ஓய்வூதியம்....
கடந்தாண்டு நவம்பர் மாதம் வரையிலான ஓய்வூதிய நிலுவை வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு உள்ள ஓய்வூதிய நிலுவைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பயணவழி உணவகங்களில் உள்ள உணவுகளின் தரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள். குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் காத்தி ருக்கும் பயணி, பேருந்தின் வருகை நேரத்தை அறிந்து கொள்ள ஏதுவாக விரைவில் செயலி (ஃஆப்) வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இதன்பின் அறிவிப்புகளை வெளியிட்ட அவர், பொது இயக்கப் பயண அட்டை (இதன் மூலம் பேருந்து பயணம், மெட்ரோ ரயில், ரயில், டோல்கேட் , பார்க்கிங், ஷாப்பிங் கட்ட ணங்களை செலுத்த முடியும்)அறிமுகப்ப டுத்தப்படும். அரசு பேருந்துகளில் மாற்றுத்திற னாளிகளுக்கு 25 பேருந்துகளில் மின் உதவி யுடன் நீராற்றலால் இயங்கும் சக்கர நாற்காலி தூக்கி வசதி ஏற்படுத்தப்படும். கொடைக்கான லில் அடுக்குமாடி கார் நிறுத்தம் ஏற்படுத்தப்ப டும். கிராமங்களிலும், கல்லூரிகளிலும் பழகு நர் உரிமம் வழங்கப்படும் என்றார்.