tamilnadu

img

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சென்னை,அக்.26- சென்னை மற்றும் திருப்பூரில்  லஞ்ச ஒழிப்பு காவலர்கள் நடத்திய சோத னையில் கணக்கில் வராத  ரூ. 24 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 12 சவரன்  நகை பறிமுதல் செய்யப் பட்டது. சென்னை தாம்பரம் அருகே சிட்லப்பாக்கத்தில் அமைந்துள்ள தோமை யார்மலை ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தில், 25 க்கும்  மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை  அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு நிறுத்தப் பட்டிருந்த வாகனங்களிலும் சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையில் இனிப்புப் பெட்டிகளில் 2 ஆயி ரம், 500 ரூபாய்கள் ஏராளமாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட் டது. இதனை லஞ்ச ஒழிப்பு காவ லர்கள் பறிமுதல் செய்தனர். மொத்தத்தில் இந்த அலுவ லகத்தில் மட்டும் 22 லட்சத்து  55 ஆயிரம் ரூபாய் பணமாக வும், 12 சவரன் தங்க நகை களும் பறிமுதல் செய்யப் பட்டன.

திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தின் முதல் தளத்தில் கலால் உதவி ஆணையர் அலுவலகம் அமைந்துள்ளது. தீபாவளி சமயம் என்பதால் மதுபான கூடங்கள், லாட்ஜ் உள்ளிட்ட வற்றில் இருந்து தீபாவளி அன்பளிப்பாக பணமோ ,  பரிசுப்பொருளோ லஞ்சமாக  வழங்கப்படலாம் என்ற  சந்தேகத்தின் அடிப்படை யில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத சுமார் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 280 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து கலால் உதவி ஆணையர் ஜெயராணியிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.