சென்னை, ஆக. 1- விடுமுறை தினமான வரும் சனிக்கிழமையன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திர பதிவுத் துறை அலுவலகங்களும் இயங் கும் என பத்திர பதிவுத்துறை தலைவர் பாலச்சந்திரன் தெரி வித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி சனிக்கிழமை ஆடிப்பெருக்கு என்பதால், சொத்து பரிமாற்றம் மற்றும் ஆவணம் பதிவு செய்தல் போன்றவற்றை பொதுமக்கள் மேற்கொள்வர். எனவே, பொது மக்கள் வசதிக்காக பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் வழக்கம் போல் காலை 10 மணி முதல் இயங்கும் எனவும், விடு முறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுக்கு பதிவுத் துறை சட்டப்பிரிவு 17 (3)இன் படி கூடுதல் கட்டணம் வசூலிக் கப்படும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் அன்றைய தினமே ஆவணங்கள் பதிவுக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.