tamilnadu

img

தலைமைச் செயலகத்தில் தீ விபத்து கேரளத்தில் கலவரம் நடத்த யுடிஎப்- பாஜக முயற்சி

போலீசாரை தாக்க முயன்ற பாஜக கும்பல்

திருவனந்தபுரம், ஆக.26- கேரள தலைமைச் செயலகத்தின் நெறிமுறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து கலவரங்களுக்கான கூட்டு நடவடிக்கையில் பாஜகவுடன், காங்கிரஸ் கட்சி களமிறங்கியுள்ளது. ஆகஸ்ட் 25 செவ்வாயன்று மாலை 4 மணியளவில் தலைமைச் செயலகத்தின் வடக்கு பகுதியில் பொது நிர்வாகத் துறையின் கீழ் உள்ள நெறிமுறை (Protocal) அரசியல் பிரிவில் தீப்  பற்றியது. சில நிமிடங்களில் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். தீயை அணைத்து விட்டு தடயங்களை சேகரிக்க நிபுணர்களின் வருகைக்காக காத்திருந்த போது, திடீரென தலைமைச் செயலகத்திற்குள் புகுந்த பாஜக தலை வர் கே.சுரேந்திரன் தலைமையிலான கும்பல் தடயங்களை அழிக்க முற்பட்டனர். காவல்துறையினரை, பாஜக மாவட்டத் தலைவர் வி.வி.ராஜேஷ் தலைமையிலான கும்பல் தாக்கவும் முயன்றனர். தடயவியல் வல்லுநர்கள் வரு வதற்குள் இந்த சம்பவம் நடந்தேறியது. அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் அங்கு வந்து பீதி ஏற்படுத்தினார். கோவிட் நெறிமுறைகளை பின்பற்றா மல் தலைவர்களும் ஊழியர்களும் திரண்ட தும் தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா நேரடியாக தலையிட்டு அவர் களை தலைமைச் செயலக வளாகத்தி லிருந்து வெளியேற்றினார்.

முக்கியத்துவம் இல்லாத கோப்புகளில் தீ

ஓய்வு இல்லங்களில் அறைகள் முன்பதிவு தொடர்பான முக்கியத்துவம் இல்லாத சில கோப்புகளில் மட்டுமே தீ பிடித்தது. இதனை தங்க கடத்தலுடன் தொடர்புள்ள கோப்புகள் என்பதாக பொய்யான கதைகளை பாஜக, யுடிஎப் தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர். அர சியல் பிரிவில் 5 அலுவலர்கள் உள்ளனர். இங்கு விருந்தினர் மாளிகைகளின் முன்பதிவை கவனிக்கும் பிரிவில் தீ பிடித்தது.  குறிப்பிட்ட அந்த இடத்தில் இருந்த அதிகாரி கோவிட் தொற்றுக்கான அறிகுறி யுடன் தனிமை- கண்காணிப்பில் உள் ளார். தீப் பிடித்த உடன் தீயணைப்பு படை யினர் அந்த இடத்திற்கு வந்துவிட்டனர். அதற்குள் கோப்புகளின் அடுக்கில் இருந்த சில காகிதங்கள் எரிந்துவிட்டன. தில்லி கேரள ஹவுஸ் உள்ளிட்ட வற்றை முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களும், அனுமதிக்கப்பட்ட உத்தரவுகளும் எரிந்தன. அமைச்சர்களின் நெறிமுறை தொடர்பான சில கோப்பு களும் இதில் உள்ளன. 

தங்க கடத்தல் கோப்புகள் பத்திரமாக உள்ளன

ஆனால், முக்கியமான எந்த கோப்பும் எரியவில்லை. தலைமைச் செயலகத்தின் 95 சதவிகிதம் கோப்புகளும் மின்னணு வடிவில் (இ-பைலிங்) உள்ளதால் எந்த ஆவணமும் இல்லாமல் ஆகிவிடாது என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அலு வலகத்தின் ஒரு கணினியில் ஏற்பட்ட மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டதாக பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.  அதன் அருகில் உள்ள அடுக்கில் இருந்த கோப்புகளுக்கு தீ பரவியுள்ளது. எனினும், முக்கிய கோப்புகள் பாது காப்பாக உள்ளதாக பொது நிர்வாகத் துறையின் கூடுதல் செயலாளர் பி.ஹனி தெரிவித்தார். தங்க கடத்தல் தொடர்பான கோப்புகள் பத்திரமாக உள்ளதாக நெறிமுறை அலுவலர் பி.சுனில் குமார் தெரிவித்தார்.

விசாரணை தொடங்கியது

கேரள அரசு தலைமையகத்தில் செவ்வாயன்று தீப்பற்றியது குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி காவல் தலைமையக ஏடிஜிபி மனோஜ் ஆப்ரகாம் தலைமையிலான குழு தீப்பற்றியது குறித்து விசாரித்து வரு கிறது. ஏடிஜிபி விஜயன் கண்காணிப்பில் சிறப்பு காவல் கண்காணிப்பாளர் வி.அஜித் புதனன்று காலை சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து தடயங் களை சேகரித்தனர். இதனிடையே தலைமைச் செயலக கட்டடங்களுக்கு பொறுப்பு வகிக்கும் பொதுப்பணித்துறை கட்டடப் பிரிவு முதன்மை பொறியாளரிடம் அமைச்சர் ஜி.சுதாகரன் அறிக்கை அளிக்குமாறு கேட்டுள்ளார்.