சென்னை,ஆக.6- மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரி களை தொடர்ந்து நடத்துவதா அல்லது மூடுவதா என்பது குறித்து அந்தந்த கல்லூரி கள் தான் முடிவு செய்ய வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியிலுள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில், பி.ஆர்க் படிப்புகளுக்கான கலந்தாய்வை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழ கன் தொடங்கி வைத்தார். முதல் 20 இடங் களை பிடித்த மாணவர்களுக்கு ஒதுக் கீட்டுக்கான ஆணைகளையும் அமைச்சர் வழங்கினார். தமிழகம் முழுவதும் 51 கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 810 இடங் களுக்கு, ஆயிரத்து 827 மாணவ, மாணவி கள் விண்ணப்பித்திருந்தனர்.
இதற்காக நடைபெற்ற ‘நாட்டா’ நுழைவுத் தேர்வில் பெற்ற கட் ஆப் மதிப் பெண்கள் மூலம் மாணவர்கள் கலந்தாய் வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். செவ்வா யன்று(ஆக.6) தொடங்கிய கலந்தாய்வு, 8 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடை பெற உள்ளது. இந்த கலந்தாய்வை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசிய அமைச்சர், “இந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி களில் மாணவர் சேர்க்கை ஒற்றை இலக் கத்தில் இருக்கிறது” என்றார். அத்தகைய கல்லூரிகளை மூட அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு, அந்தந்த கல்லூரிகள் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும், அரசு முடி வெடுக்க முடியாது எனவும் அமைச்சர் பதிலளித்தார்.