சென்னை,அக்.23- சுற்றுச்சூழல் மாசுபடு வதை தவிர்க்கும் வகையில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரம் எது என்பதை மாநில அரசே முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் ஞாயிற்றுக் கிழமையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலையில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டா சுகளை வெடிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றம், புனித தலங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் பட்டாசு வெடிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப் பாடுகளும் விதிக்கப் பட்டுள்ளன. புதுச்சேரியில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.