tamilnadu

img

‘பாதுகாப்பு கவச ஆடைகளை போதிய அளவில் தயார் செய்க!’

புதுதில்லி,மார்ச் 24- கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவச ஆடைகளை போதிய அளவில் தயாரித்துத்தர வேண்டும் என்று அதன் நிறுவனங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வேண்டு கோள் விடுத்துள்ளது. கொரோனா பாதுகாப்பு கவச  ஆடைகளுக்கான தேவை அதி கரித்துள்ள நிலையில், அதன் ஏற்று மதியை தொடர இயலாது பல்வேறு  சர்வதேச நிறுவனங்கள் தெரிவித்து விட்டன. இதைத்தொடர்ந்து உலக சுகா தார நிறுவன அளவுகோல் மற்றும் ஐஎஸ்ஓ தரத்துடன் கூடிய பாது காப்பு கவச ஆடைகளை தயாரிக்க உள்நாட்டு நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 5 நிறுவனங்கள் அதற்காக முன்வந்துள்ளதுடன் அதற்கான மாதிரிகள் பெறப்பட்டு, கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்க ஆய்வகத் தில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.