tamilnadu

img

போக்குவரத்து ஊழியர்களுக்கான 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை

போக்குவரத்து ஊழியர்களுக்கான 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும், 1.4.2003க்குப் பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு கழக பென்சனை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் செவ்வாயன்று (நவ.12) சென்னை பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எல்பிஎப் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் கே.ஆறுமுகநயினார், துரை, தயானந்தம் (சிஐடியு), பழனி (எல்பிஎப்), ஆறுமுகம் (ஏஐடியுசி), அந்திரிதாஸ் (எம்எல்எப்), பத்மநாபன் (டிடிஎஸ்எப்) உள்ளிட்ட தலைவர்கள் பேசினர்.