tamilnadu

img

தோல்வியிலிருந்து நூலிழையில் தப்பிய பாஜக.... தேஜகூ - மகா கூட்டணி வாக்கு வித்தியாசம் வெறும் 12 ஆயிரம்....

பாட்னா:
பீகார் மாநில சட்டப் பேரவை தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றிபெற்று பெரும் பான்மை பெற்றுள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங் கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சி கள் அடங்கிய மகா கூட்டணி 110 இடங்களை மட்டுமே பெற் றுள்ளது.ஆட்சியைக் கைப்பற்ற முடியாவிட்டாலும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி பீகாரின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜக 74 தொகுதிகளை வென்ற நிலையில், அக்கட்சியைக் காட்டிலும் கூடுதலாக ஒரு தொகுதியை  (மொத் தம் 75 இடங்கள்) ராஷ்ட்ரிய ஜனதாதளம் வென்றது.இதுஒருபுறமிருக்க, பெரும்பான்மை பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இரண்டாவது இடத்தைப் பிடித்த ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைமையிலான மகா கூட்டணிக்கும் இடையிலான மொத்த வித்தியாசமே வெறும் 12 ஆயிரத்து 768வாக்குகள்தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணிஒரு கோடியே 57 லட்சத்து ஆயிரத்து 266 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதேநேரம் மகா கூட் டணி ஒரு கோடியே 56 லட்சத்து 88 ஆயிரத்து 458 வாக்குகளை அள்ளியிருக்கிறது. 

சதவிகித அடிப்படையில் பார்த்தால் தே.ஜ.கூ. 37.26 சதவிகிதமும், மகா கூட்டணி 37.23 சதவிகிதமும் பெற்றுள்ளன.இதனிடையே, பீகாரில் 20 தொகுதிகளில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அந்தவாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்றும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.