பாட்னா:
பீகார் சட்டமன்றத் தேர்தலில் நவம்பர் 10 அன்று 6 மணி நிலவரப்படி மகாகத்பந்தன் கூட்டணி 115 இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி 121 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தன. எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இழுபறி நீடிக்கிறது.பீகார் சட்டமன்றத் தேர்தல்மூன்று கட்டங்களாக நடைபெற்றன. 7.30 கோடி வாக்காளர்களில் 4.16 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். அதாவது 57 சதவீதம் வாக்குகள் பதிவாகின.இத்தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் (எம்எல்) கட்சி அடங்கிய மகாகத் பந்தன் அணியும் ஜக்கிய ஜனதாதளம் ,பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியும் பிரதான அணிகளாக போட்டியிட்டன. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சியும் போட்டியிட்டது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10 நடைபெற்றது. இதில் ஆரம்பத்தில் மகாகத் பந்தன் அணி முன்னிலை பெற்றது.பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றது.பின்னர் 3 மணி நேரத்திற்கு பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி 19 தொகுதிகளில் பின்னடைவை சந்தித்தது. இதைத்தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளம்கட்சி 23 சதவீத வாக்குகளுடன் 78தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. இடதுசாரிக்கட்சி கள் 18 தொகுதிகளில் முன்னிலை பெற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களில்வென் றது. மேலும் ஒரு இடத்தில் முன்னிலை பெற்றிருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) கட்சி 11 இடங்களிலும் முன்னிலை பெற்றன. காங்கிரஸ் 22 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சியான ஜக்கிய ஜனதா தளம் 40 தொகுதிகளில் மட்டும் முன்னிலை பெற்று, கடும் பின்னடைவை சந்தித்தது. ஒன்றிரண்டு தொகுதிகளில் முன்னிலை பெற்ற லோக் ஜனசக்தி கட்சி,பின்னர் எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை.
ஆட்சி மாற்றம் உறுதி: ஆர்.ஜே.டி.
பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி என்று ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) அதிகாரப்பூர்வ டிவிட்டரில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நள்ளிரவு ஆனாலும்வாக்கு எண்ணும் மையங்களிலேயே இருக்க கட்சியினருக்குஅறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முடிவு தெரிய நள்ளிரவு ஆகலாம்
வாக்கு எண்ணிக்கை வழக்கமான நேரத்தைவிட, நள்ளிரவுவரை நீடிக்க வாய்ப்பு உள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து தில்லியில் தேர்தல் ஆணைய அதிகாரி(பொறுப்பு) சுதீப் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறுகையில், பீகார் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிய வழக்கமான நேரத்தைவிட அதிகமான நேரம் பிடிக்கும். அதாவது நள்ளிரவு வரைகூட வாக்கு எண்ணிக்கை நீடிக்கும்.இதற்கு காரணம் கொரோனா வைரஸ் காரணமாக வாக்குப்பதிவு மையங்கள் அதிகரித்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எண்ணிக்கையை 63 சதவீதம்அதிகப்படுத்தியதுமே ஆகும்.வழக்கமாக 72,723 வாக்குப்பதிவு மையங்கள் மட்டுமே வைக்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக வாக்குப்பதிவு மையங்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 515 ஆக உயர்த்தப்பட்டது. ஏறக்குறைய 46.5 சதவீதம் வாக்கு மையங்கள் அதிகரிக்கப்பட்டன. பிற்பகல் 1.30 மணி வரை ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டிருந்தன. ஆனால், 3 கட்டத் தேர்தலில் 4.16 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆதலால், வாக்கு எண்ணிக்கை முடிய நள்ளிரவு வரை ஆகலாம்.தேர்தல் வாக்கு எண்ணிக்கைஎந்தவிதமான அசம்பாவிதங் களும் இல்லாமல் நடந்து வருகிறது. நள்ளிரவுக்குள் வாக்குகள் எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்று நம்புகிறோம்.கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில் 38 மையங்களில் வாக்கு எண்ணப்பட்டன, ஆனால், இந்த முறைசமூக விலகலைக் கடைப்பிடித்து வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்பதற்காக 55 மை
யங்களாக உயர்த்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் வழக்கமாக 14 மேஜைகள் போடப்படும் இந்த முறை 7 மேஜைகள் மட்டுமே போடப் பட்டன என்று தெரிவித்தார்.