tamilnadu

img

பழனியில் காத்திருப்பு போராட்டம்

பழனி:
பழனி ஆயக்குடியில் கொரோனாதொற்று காரணமாக தற்காலிகமாக செயல்பட்டு வரும் கொய்யா மார்க்கெட்டை மாற்றி நிரந்தர கொய்யாப்பழமார்க்கெட் சுகாதாரமான கழிப்பிடம்மற்றும் விளக்கு வசதி களோடு அமைக்ககோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.விவசாயசங்க மாவட்டத் தலைவர் பி.செல்வராஜ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் விவசாய தொழிலாளர் சங்கமாவட்ட செயலாளர் கே.அருள்செல்வன், ஒன்றிய செயலாளர் கமலகண்ணன், மாதர் சங்கம் சார்பாக கல்பனா கௌரி மற்றும் பழ வியாபாரிகள் கலந்து கொண்டனர். நிரந்தர கொய்யாபழ மார்கெட் அமைத்து தருவதாக ஆயக்குடி பேரூராட்சி அதிகாரிகள் கூறினர்.

;