tamilnadu

பழனியில் ஒருவர் வெட்டிக் கொலை

பழனி, ஜூன் 14- பழனி அருகே உள்ள புது ஆயக்குடி 8-வது வார்டை சேர்ந்தவர் மோசஸ். இவரது மகன் அலெக்ஸ்பாபு( 29). பழனி வைரவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ்குமார்(23). இவர் கோவையில் நகை தயார் செய்யும் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக கணேஷ் குமார் பழனிக்கு வந்து இருந்தார். இவர்கள் இரு வருக்கும் பழனி தெரசம்மாள் காலனி பகுதியை சேர்ந்த ஆனந்த் (24) நண்பராக உள்ளார். இவர்கள் மூன்று பேரும் இரு சக்கர வாகனத்தில் மதனபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று இவர்களை மறித்து அரிவா ளால் வெட்டியுள்ளது. இதில் கணேஷ் குமார் படுகாயமடைந்தார். அலெக்ஸ்பாபு வும், ஆனந்தும் தப்பித்துள்ளனர். அந்த கும்பல் எதிரே வந்த பாலசமுத்திரத்தை சேர்ந்த அன்சாரி என்பவரை மறித்து அரி வாளை காட்டி அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறித்து அதில் ஏறி அலெக்ஸ் பாபுவையும், ஆனந்தையும் விரட்டி சென்று அலெக்ஸ்பாபுவை வெட்டினர். இதில் அவர் உயிரிழந்தார். ஆனந்த் அங்கி ருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவம் குறித்து பழனி காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். படுகாயம டைந்த கணேஷ்குமாரின் உடல்நிலை கவ லைக்கிடமாக உள்ளது.

;