tamilnadu

img

அறிவிப்பு சரி... ஆணை எங்கே...? தமிழக அரசுக்கு எதிராக ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர்கள் போராட்டம்

பழனி, மே 28- பம்ப் ஆப்ரேட்டர்களுக்கு மாத ஊதியம் அடிப்படைச் சம்ப ளம் ரூ 4,000, தூய்மைக்காவலர் களுக்கு மாத ஊதியம் அடிப்ப டைச் சம்பளம் ரூ. 3,600 வழங் கப்படுமென தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கான அர சாணையை உடனடியாக வெளி யிட வேண்டும். கொரோனா காலத்தில் தூய் மைப்பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம், நிவாரணம் வழங்க வேண் டும். தூய்மைப்பணியாளர்களின் சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டுமென வலி யுறுத்தி பழநி, தொப்பம்பட்டியில் உள்ளாட்சி ஊழியர்கள் மனுக் கொடுக்கும் போராட்டம் நடத்தினர். பழனியில் உள்ளாட்சி ஊழி யர் சங்க நிர்வாகிகள் மாரியப் பன், மாவட்டப் பொருளாளர், சிஐ டியு மாநிலக்குழு உ.றுப்பினர், சோ.மோகனா, பழனி ஒன்றிய உள்ளாடசி ஊழியர் சங்க செய லர் பெரியசாமி, பஞ்சாலை சங்க செயலர், ஈஸ்வரன், சிஐடியு கன் வீனர் பிச்சைமுத்து , பழநி நக ராட்சி உள்ளாடசி செயலர், ஆறு முகம் உட்பட 60 பேர் பழனி வட் டார வளர்ச்சி அலுவலரிடம் கோரி க்கை மனு அளித்தனர்.

திண்டுக்கல்
தொப்பம்பட்டியில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் சோ. மோகனா, விவசாயத் தொழிலா ளர் சங்க நிர்வாகி ராமசாமி, சிஐ டியு கன்வீனர் பிச்சைமுத்து, உள் ளாட்சி ஊழியர் சங்க தொப்பம் பட்டி செயலாளர் முருகேசன் உள் ளிட்ட 79 பர் தொப்பம்பட்டி உள்ளா ட்சி மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். திண்டுக்கல்லில் மாவட்டக் குழு உறுப்பினர் குணசீலன் தலை மை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.கணேசன், சுந்தரம், தவக்குமார், சூயென் லாய், உமாபதி, சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் தனசாமி, நத்தத்தில் ஸ்டாலின், வத்தல குண்டில் ராமசாமி, நிலக்கோட் டையில் அழகர்சாமி, குஜிலி யம்பாறையில் பாலசுப்ரமணி, சாணார்பட்டியில் எம்.கே.ராஜா, ஆகியோர் தலைமையில் மனுக் கொடுக்கும் போராட்டம் நடை பெற்றன.  வேடசந்தூரில் வாலிபர் சங்க திண்டுக்கல் மாவட்டப் பொருளா ளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை யில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். வேடசந்தூர் பகுதித் தலைவர் பழனிச்சாமி, செயலா ளர் சுப்பிரமணி, பொருளாளர் பர மேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

சிவகாசி
சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமை யேற்றார். துவக்கி வைத்து பட் டாசு தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சி.பாண்டியன் பேசி னார். முடிவில் சிஐடியு மாவட்ட பொருளாளர் வி.ஆர்.செல்லச் சாமி கண்டன உரையாற்றினார். மேலும் இதில், வி.என்.ஜோதி மணி உட்பட பலர் பங்கேற்றனர்.