புதுதில்லி:
நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாகவோ அல்லது பூஜ்ஜிய மாகவோ இருக்கும் என்று மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனும் ஒப்புக் கொண்டுள்ளார்.
நடப்பு 2019-20 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் (மைனஸ்) 9.6 சதவிகிதம் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியோ (மைனஸ்) 9.3 சதவிகிதம் என்று பொருளாதார வீழ்ச்சியை கணித்துள்ளது. அதுவே சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப். ஜிபிடி வீழ்ச்சி10.3 சதவிகிதமாக இருக்கும் என்றுகூறியுள்ளது.எனினும், மத்திய ஆட்சியாளர்கள் இதுபற்றி கருத்து எதுவும்தெரிவிக்காமல் இருந்துவந்தனர்.இந்நிலையில், இந்திய எரிசக்தி கூட்டமைப்பு மாநாட்டில் பேசியிருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தாண்டுபொருளாதார வளர்ச்சி இருக்காது என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.
“ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் தெரிகிறது. விரைவில் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புவோம் என்றுநம்பிக்கை உள்ளது. ஆனால்,இந்த ஆண்டில் அதற்கான வாய்ப்புகள் குறைவுதான். பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் எதிர்மறையாகவோ அல்லது பூஜ்ஜியமாகவோ இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.