உலகக்கோப்பை தொடருக்கு அசுர பலத்தில் களமிறங்கிய இந்திய அணி கண்டிப்பாகக் கோப்பை வென்று வரும் என ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அரையிறுதியில் நியூஸிலாந்து அணியிடம் போராடித் தோல்வியடைந்தது. தோல்வியைப் பொறுத்துக்கொள்ளாத ரசிகர்கள் வீட்டிலிருந்த தொலைக் காட்சிப் பெட்டிகளைப் பந்தாடினர். பஞ்சாபி கிரிக்கெட் ரசிகர்கள் ஒருபடி மேலே சென்று அமிர்தசரஸில் இந்திய வீரர்களுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பியபடி போஸ்டர்களை (பிளக்ஸ்) தீயிட்டுக் கொளுத்தினர்.