tamilnadu

img

பப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு

பப்புவா நியூகினியாவில் தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் இருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது ரிக்டரில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. 

பசுபிக் தீவின் பப்புவா நியூகினியாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. காலை 7.20 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.2ஆக பதிவாகி இருக்கிறது. புலோலோ நகரத்தில் இருந்து 33 கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்கு ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் கிழக்கு கடலுக்கு 127 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டது என்று இன்னும் தகவல் வெளியாகவில்லை. உயிரிழப்பு குறித்தும் இன்னும் தகவல் வெளியாகவில்லை அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. பப்புவா நியூகினியா கடல்பகுதியில், அதன் ஒட்டிய சாலமன் கடல் பகுதியிலும் மிக அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.