tamilnadu

img

நேபாளத்தில் விமான விபத்து 3பேர் பலி; 4பேர் படுகாயம்

நேபாளத்தில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 3பேர் பலியாகினர். மேலும், 4பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.


நேபாள நாட்டில் உள்ள லுக்லா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Let-410 என்ற சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று தனது ஓடுபாதையில் இருந்து மேலெழும்பும்பொழுது அங்கிருந்த இரண்டு ஹெலிகாப்டர்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது. உலகின் மிகப்பெரிய சிகரமான எவரஸ்ட் சிகரத்திற்கு செல்ல முக்கிய வழியாக லுக்லா விமான நிலையம் இருந்து வருகிறது. மேலும், இந்த லுக்லா விமான நிலையம் உலகிலேயே விமானங்களை தரையிறக்கவும், தரையிலிருந்து பறக்கச் செய்யவும் மிக கடினமான விமான நிலையமாக கூறப்படுகிறது.


இந்த விபத்தில் தரையில் நின்று கொண்டிருந்த காவலர் உள்பட 3 பேர் பலியாகினர். மேலும், விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விமான விபத்து ஒன்றில் நேபாள நாட்டின் சுற்றுலா துறை அமைச்சர் உள்பட 7 பேர் பலியானது என்பது குறிப்பிடத்தக்கது.


;