tamilnadu

img

2020 - இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு  இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு துறை வாரியாக கடந்த அக்.5 திங்கள் கிழமை முதல் அறிவிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக் பெறுகிறார்.

1968 ஆம் ஆண்டில் ‘பர்ஸ்ட் பார்ன்’ என்ற கவிதை மூலம் அறிமுகமான இவர் 12 கவிதைத் தொகுப்புகளையும், கவிதைகள் குறித்த சில கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.