உதகை, அக்.10 - தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ஆடை களை கொள்முதல் செய்து,இந்தியா முழுவ தும் சந்தைப்படுத்தி வருகிறது. இந்நிலை யில், இவ்வாண்டு தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனைக்காக கைத்தறி ஆடை களுக்கு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும், செப். 15 ஆம் தேதி முதல் 30 சதவிகிதம் சிறப்பு தள்ளு படி வழங்குகிறது. இந்த சிறப்பு விற்பனைக் ாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புடன் கூடிய மென் பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், உயர் ரக பருத்தி சேலைகள், பெண்கள் விரும் பும் சுடிதார் ரகங்கள் என ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு தீபாவளியின்போது உதகை விற்பனை நிலையம் ரூ. 83.17லட்சம் விற்பனை செய்துள்ளது. நடப்பு ஆண்டு தீபாவளிக்கு ரூ. 1 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழாவை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத் தார். இவ்விழாவில் மண்டல மேலாளர் க.அருள்ராஜன், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மேலாளர் பெ.பாலமுருகன், துணை மண்டல மேலாளர் (தணிக்கை) ஆர்.மோகன்குமார், உதகை விற்பனை நிலைய பொறுப்பாளர் சபினா நாஸ் உள் ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.