tamilnadu

img

கடும் எதிர்ப்பை தொடர்ந்து உதகை மலைரயிலை தனியார் மயமாக்குவதை கைவிட்டுள்ளது தென்னக ரயில்வே

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் உதகை மலை ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டிருந்தது.
சமீபத்தில் நீலகிரி மலை ரயில் தனியார் நிறுவனத்துக்காக மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை இயக்கப்பட்டது. ஒருவருக்கு ரூ.3,000 கட்டணம் என 4.80 லட்சத்தை அந்த தனியார் நிறுவனம் கட்டியது. 
இதையடுத்து தனியார் நிறுவனத்தின் ஸ்டிக்கர் ஒட்டியும், விமான பணி பெண்கள் போன்று உடையணிந்த பெண்களையும் ரயிலில் பணியில் அமர்த்தியது. இது நீலகிரி மலை ரயிலை  தனியார் மயமாக்கும் முயற்சி என்று பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் . உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரதிநிதிகள் தென்னக ரயில்வேயின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இன்று தென்னக ரயில்வே உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடங்குவதாக உறுதிப்படுத்தி உள்ளது.