நீலகிரி மாவட்டம் கூடலூர், மேல்கூடலூர் முதல் கோக்கால் வரையில் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு புதியதாக அமைக்கப்பட்ட தார்சாலை தற்போது பெய்த மழையினால் ஆங்காங்கே பெயர்ந்து உள்ளது. இந்நிலையில், சாலை யின் தரத்தை ஆய்வு செய்து மீண்டும் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.