tamilnadu

img

20 சத போனஸ் கோரி மின் ஊழியர்கள் முழக்கம்

உதகை, நவ. 9 - தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபு ரியும் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு வரை பின்பற்றப்பட்ட 20 சதவிகித போனசை வழங்கிட வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு 10 சதவிகித போனஸ் என்று தமிழக அரசு தன்னிச்சை யாக அறிவித்ததை கண்டித்தும், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் 20 சதவி கித போனஸ் வழங்க வேண்டும் என வலியு றுத்தி திங்களன்று உதகை, குன்னூர், குந்தா, மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில்   உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட் டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ரமேஷ், மின் ஊழியர் மத்திய அமைப் பின் நிர்வாகிகள் சண்முகம், முரளித ரன், ஜெகநாதன், ரவி சண்முகம், ராமகிருஷ் ணன், சுப்ரமணி, சாலி, முத்து, சாஜி, ஐக்கிய  தொழிலாளர் பொறியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் வெ.ஜெயகுமார், பாபு, பிச்சைய்யா, பொறியாளர் சங்கத்தின் குணசிங், தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தின் நஜிபுதீன், சதீஷ்குமார், தொழிலாளர் சம்மேளன நிர்வாகி கிருஷ்ணன் உள்ளிட்ட  ஏராளமான மின் ஊழியர்கள்  கலந்து கொண்டனர்.