tamilnadu

img

நடைபாதையில் கழிவுநீர்: சீரமைக்க கோரிக்கை

உதகை, மார்ச் 12- உதகை, லோயர் பஜார் பகுதியில் பூங்கா பின்பு றம் உள்ள நடைபாதையில் கழிவுநீர் செல்வதைத் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு உட் பட்ட லோயர் பஜார் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர  போஸ் நினைவு பூங்கா பின்புறம் உள்ள நடைபா தையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் இப்ப குதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், நடைபாதையை பயன்படுத்துவோர் மிகவும் சிரமம் அடைகின்ற னர். இந்நிலையில் பல நாட்களாக ஓடும் இச்சாக்க டையை சீர்படுத்தக் கோரி சம்பந்தப்பட்ட துறையி னரிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வழிந்தோடும் இச்சாக்க டையை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.